Followers

Tuesday, April 30, 2013

மகரம்: ஐந்தில் கேது



வணக்கம் நண்பர்களே!

                     மகர ராசிக்கு ஐந்தில் கேது நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

பெண்களாக இருக்ககூடும்.

அடையாளம்?

ரிஷப ராசியில் கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். சமஸ்கிரத மொழி பேசியிருப்பார். இவரின் வீடு கிழக்கு பக்கமாக இருந்திருக்கும்.

ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் வெள்ளை கலரில் இருந்திருக்கலாம். தாய்மொழி பேசியிருப்பார். இவரின் வீடு வடமேற்கு திசையில் இருந்திருக்கும்.

ரிஷப ராசியில் மிருகசீர்ஷம் 1, 2 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். தெலுங்கு மொழி பேசியிருப்பார். இவரின் வீடு தெற்கு திசையில் இருந்திருக்கும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

ரிஷப ராசியில் கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

தலையில் தாக்கி கொல்லபட்டுருப்பார்.

ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

முகத்தில் அல்லது வயிற்றில் தாக்கி அதன் மூலம் நோய் ஏற்பட்டு இறந்திருப்பார்.

ரிஷப ராசியில் மிருகசீர்ஷம் 1, 2 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

கை மற்றும் தோல் பகுதியில் தாக்கி இறந்திருக்கலாம்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

ரிஷப ராசியில் கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடமேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

ரிஷப ராசியில் மிருகசீர்ஷம் 1, 2 ம் பாதங்களில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தெற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமையில் விநாயகர் மற்றும் அம்மனை வணங்கி வாருங்கள்.  எமகண்ட நேரமாக இருந்தால் உகந்தது.
நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: