Followers

Wednesday, April 17, 2013

நல்ல யோசனை



வணக்கம் நண்பர்களே !
                      நீங்கள் அனைவரும் சோதிடர்கள். சோதிடத்தில் நல்ல புலமையை பெற்றவர்கள். நீங்கள் சோதிட அறிவை பெற்றால் மட்டும் போதாது. உங்களை நாடி வருபவர்களிடம் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வுயை தரவேண்டும். 

வெறும் ஜாதகத்தை பார்த்துவிட்டு அந்த கிரகம் இந்த வீட்டில் அமர்ந்திருக்கிறது இந்த கிரகம் இந்த வீட்டில் அமர்ந்திருக்கிறது என்று சொல்லிவிட்டு பலனை மட்டும் சொல்லிக்கொண்டு இருக்ககூடாது. அந்த கிரகம் அந்த இடத்தில் அமர்ந்ததால் இந்த பிரச்சினை வருகிறது அல்லது வரபோகிறது என்று சொல்லிவிட்டு அதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்லிவிடவேண்டும்.

இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் சோதிடத்தில் நல்ல அறிவு இருக்கின்றது அதற்கு காரணம் தொலைக்காட்சியில் காலையிருந்து மாலை வரை சோதிடத்தைப்பற்றி தான் அதிகமான நிகழ்ச்சிகள் வருகின்றன. அதனை பார்த்து பார்த்து அனைவரும் சோதிடத்தில் நல்ல அறிவை பெற்றுவிட்டார்கள். நீங்கள் சோதிடத்தை தொழிலாக செய்ய ஆரம்பித்தால் இனி தொழில் நடத்தமுடியாத நிலைக்கூட ஏற்படலாம்.

நீங்கள் ஒரு ஜாதகத்தை பார்த்து பலனை ஒருவருக்கு சொன்னால் அந்த பலன் எல்லாம் எங்களுக்கு தெரியும் நீங்கள் வழியை சொல்லுங்கள் என்று தான் மக்கள் கேட்பார்கள். அதனால் நீங்கள் ஒரு ஜாதகத்தை பார்த்துவிட்டு அந்த ஜாதகருக்கு தீர்வை நாம் கொடுக்கவேண்டும் அப்பொழுது மட்டுமே இந்த தொழிலில் குப்பை கொட்டமுடியும்.

ஜாதகத்தை பார்த்துவிட்டு பொதுவான ஒரு பரிகாரத்தை நாம் அனைவருக்கும் பரிந்துரைப்போம். சனிக்கிரகம் உங்களுக்கு பிரச்சினையை கொடுக்கிறது அதனால் சனிஈஸ்வரர்க்கு எள் தீபம் ஏற்றி வாருங்கள் உங்களின் பிரச்சினை தீரும் என்று சொல்லுவோம். இதனை பல காலங்களாக இதை தான் நாம் சொல்லுவதால் இதனை கேட்டுக்கேட்டு மக்களுக்கு வெறுப்பே வந்துவிட்டது. வேறு ஏதாவது ஒன்றை சொல்லுங்கள் என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். காலபைரவரை அஷ்டமி அன்று வணங்கிவாருங்கள் என்று சொல்லுகிறோம் இதுவும் இப்பொழுது வெறுத்துவிட்டது என்றே சொல்லலாம்.

உங்களை தேடி வரும் நபர்களுக்கு நீங்களே அவர்களுக்கு தீர்வையும் வழங்கிவிடவேண்டும். அந்தளவுக்கு நீங்கள் ஒரு தெய்வீகமான ஆத்மாவாக செயல்பட்டு அவர்களுக்கு தீர்வை கொடுத்துவிட்டால் நீங்கள் ஒரு சிறந்த ஆன்மீகமான ஆள்.  நீங்கள் சோதிடத்தை பார்ப்பதற்க்கு சிறந்த ஆள்.

சோதிடத்தில் உள்ள அனைத்து கணக்கையும் படித்துவிட்டு ஜாதகத்தை துல்லியமாக சொல்லுவதால் என்ன நடந்துவிடபோகின்றது. ஒன்றும் கிடையாது. ஒருவருக்கு தீர்வை நீங்கள் கொடுக்கும்போது மட்டுமே பயனை அடையமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


No comments: