Followers

Thursday, April 11, 2013

சிவமே: பகுதி 5


வணக்கம் நண்பர்களே !
                    சிவமே பதிவு தொடங்கிய நாள் முதல் அந்த தொடர் வரும்போது நல்ல வரவேற்பு இருக்கும். பல நண்பர்கள் அதனைப்பற்றி என்னிடம் போனில் பேசுவார்கள்.

கடந்த பதிவை படித்துவிட்டு ஒரு சிலர் மட்டும் தான் பேசினார்கள் நிறைய போன்கால்கள் எதிர்பார்த்தேன் ஆனால் குறைந்த போன்கால்கள் மட்டுமே வந்தது. இது எதனை காட்டுகிறது என்றால் காமம் சம்பந்தப்பட்டால் அதனை விலக்கவேண்டும் என்று ஆன்மீகத்தில் உங்களை சொல்லி வளர்த்ததால் வந்து இருக்கலாம் அல்லது இதனைப்பற்றி என்ன பேசுவது என்ற கூச்சமாக கூட இருக்கலாம்.

காமத்தில் ஈடுபடும்போது உச்சநிலையில் எதனை அனுபவிக்கிறீர்களோ அதனை தான் ஆன்மீகத்தில் உச்சநிலையில் நடைபெறும். காமத்தில் சிறிய நொடியில் முடியும். ஆன்மீகத்தில் தொடர்ந்து பலமணி நேரம் இருக்கும். எல்லையற்ற ஆனந்தம் அது. அதனால் நீங்கள் காமத்தை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம்.  இதனை எல்லாம் தெளிவுபடுத்தவே இந்த பதிவு.


சிவத்தை தொடர்ந்து பார்க்கலாம்.

காமம் வழியாக கடவுளை அடையமுடியும் அதனால் நாங்கள் திருமண பந்தத்தை ஏற்படுத்திகிறோம் என்று என்னிடம் பேசிய திருமணமானவர்களே சொல்லியுள்ளார்கள். அப்படி நீங்கள் இல்லறவாழ்வை ஏற்றுக்கொள்கிறீர்கள் இல்லறவாழ்வில் இருந்து எத்தனை பேர் சிவனை அடைந்தீர்கள் என்று கேட்டால் இதற்க்கான பதில் மழுப்பலாக தான் அனைவரிடமும் இருந்து வருகிறது. இல்லறவாழ்வில் இருந்து உயர்நிலைக்கு செல்லுவதற்க்காக யோகா தியானம் எல்லாம் உருவாக்கி வைத்துள்ளார்கள் என்று சொல்லுகிறார்கள். அப்படி பார்த்தால் பல பேர் உச்சநிலைக்கு சென்று இருக்கமுடியும் ஆனால் யாரும் செல்லவில்லை என்று தான் தோன்றுகிறது. 

இன்று இல்லறவாழ்வில் ஈடுபடுவோர் அவர்களுக்குள்ளே நல்ல உடன்பாடு இருக்கிறதா என்ற சந்தேகம் தோன்றுகிறது.இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவோர் இரு உடல் ஒர் ஆத்மாவாக மாறவேண்டும் என்று சொல்லுவார்கள். இதனை கற்றுக்கொடுப்பதற்கே பல தாந்தீரீக முறைகள் இருக்கின்றன. எப்படி எல்லாம் உறவு கொண்டால் நீங்கள் இறைவனை அடையலாம் என்று அதில் வழிமுறைகள் உள்ளன. இதனை யாரும் கற்று தருவதில்லை. அதனை நீங்கள் கற்றுக்கொண்டு செயல்படவேண்டும் அப்படி செயல்பட்டால் நீங்கள் இறைவனை அடையலாம்.  நீங்கள் புத்தகங்களில் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

இன்று உறவுக்கொள்ளும் இல்லறவாசிகளும் ஏதோ உடல் வேட்கைக்காக தான் பெரும்பாலும் நடைபெறுகிறது. இருவரின் ஆத்மாவும் இணையவில்லை என்று தான் சொல்லவேண்டும். இருவரும் எண்ணங்களும் வேறு ஒருவரை தான் தேடுகிறது பின்பு எப்படி கடவுளை அடையமுடியும். இவன் தன் காதலியை நினைத்து பார்க்கலாம் அல்லது நடிகையாக கூட இருக்கலாம். பெண் தன் காதலனை நினைத்து பார்க்கலாம் அல்து நடிகரை நினைத்து பார்க்கலாம். இல்லறத்தில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றுகிறார்களே தவிர அவர்கள் ஆன்மிகத்தை தேடி அவர்களின் இல்லறபயணம்  இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

இல்லறத்தில் இருப்பவர்களும் இறைவனிடம் சேர முடியும் அதற்காக வழிகளை எல்லாம் மதத்தில் வைத்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை அதனை நீங்கள் கடைபிடிக்கவில்லை. கற்றுக்கொடுப்பவர்களும் கிடையாது என்று தான் நினைக்கிறேன்.

இல்லறவாசிகளுக்கு என்றே பல தாந்தீரிக முறைகளை நமது முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். அதனை கற்றுக்கொள்ளுங்கள். இதனை கற்காமல் நீங்கள் இருந்தால் நீங்கள் இல்லறவாழ்க்கையில் இருப்பதே வீண் என்று தான் அர்த்தம். நீங்கள் முடிவு எடு்த்து வந்தது இல்லறவாழ்க்கையிருந்து இறைவனை அடைவேன் என்று வந்துள்ளீர்கள் அதனால் அதன் வழியை தெரிந்துக்கொள்வது அவசியம்.

இந்த தாந்தீரிக முறையை எல்லாம் பயிற்சி எடுத்துப்பார்க்கலாம் என்று நினைக்கும்போது தான் சாமியார்கள் மாட்டிக்கொள்வது. அவர்கள் பிரம்மசாரிகள் அவர்கள் இந்த முறையை சோதனை செய்கிறேன் என்று செய்து மாட்டிக்கொள்வது. பிரம்மசாரி வாங்கிய பிறகு ஏன் இவர்கள் இதனை சோதனை செய்யவேண்டும். இவர்களின் வழி வேறு இருக்கும்போது எதற்கு இதற்க்குள் வரவேண்டும். அப்படி இவர்கள் சோதனை செய்தால் இவர்கள் வெளியில் சொல்லிவிடுவது நல்லது. நான் சோதனையாளன் தான் நான் பிரம்மசாரி கிடையாது. இதனை எல்லாம் சோதனை செய்து மக்களுக்கு தருகிறேன் என்று சொல்லிக்கொள்ளலாம்.

நீங்கள் இல்லறவாழ்வில் இருந்தால் கர்மாவின் வினை உங்களை பின் தொடரும். இல்லறவாழ்வில் இருப்பவர்களுக்கு என்று பல வழிமுறைகளை சொல்லியுள்ளார்கள் அதனை கடை பிடித்து நீங்கள் வருவது நல்லது. ஏதோ ஆன்மிகத்தில் நானும் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்காமல் நல்ல வழியை தேர்ந்தெடுத்து சிவத்தை அடைய முயற்சி செய்யுங்கள்.

சிவமே தொடரும்


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


No comments: