Followers

Thursday, April 4, 2013

சொல்ல நினைக்கிறேன்



வணக்கம் நண்பர்களே!
                     நேற்று ஒரு நண்பர் என்னை சந்தித்து பேசினார். அவர் பேசும்போது சொன்னார் நான் எந்த தொழில் செய்தாலும் நஷ்டம் தான் வருகிறது. என்னால் லாபத்தை ஈட்டமுடியவில்லை என்றும் சொன்னார். கடந்த இரண்டு வருடங்களாக நமது பதிவை படித்துவருவதாகவும் சொன்னார்.

அவருக்கும ராகு தசா முடியும் தருவாயில் இருக்கிறது மீதம் 1 வருடகாலம் தான் இருக்கிறது. அவரிடம் தசா நாதனுக்கு நீங்கள் ஏதும் பரிகாரம் செய்திருக்கிறீர்களா என்று கேட்டேன். நான் எதுவும் செய்யவில்லை என்று சொன்னார். அவர் பேசும் போது பல ஆன்மிகதளங்களை தினமும் படித்துக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னார்.

நான் அவரிடம் சொன்னதை உங்களுக்கு சொல்லுகிறேன். எந்த தசா ஆரம்பித்தாலும் அந்த தசா நாதன் நன்றாக இருந்தாலும் கெட்டு இருந்தாலும் அந்த தசாநாதனுக்கு நீங்கள் கண்டிப்பாக பரிகாரம் செய்யவேண்டும். நீங்கள் பரிகாரம் செய்துவிட்டால் அந்த தசாநாதன் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை கெடுதலை செய்யமாட்டார். இப்பொழுது நான் அனைவருக்கும் புத்திநாதன் வரும்பொழுதே அந்தந்த புத்திநாதனுக்கு பரிகாரம் செய்யசொல்லுகிறேன். 

ஒவ்வொரு தசாநாதனுக்கும் உங்களால் முடிந்த பரிகாரத்தை செய்துவிடுவது நல்லது. ஒவ்வொரு ஜாதகத்திலும் தசாநாதனின் செயல்பாடு அதிகமாக இருக்கும். அவர் தான் உங்களை இயக்குபவர் அதனால் அவரை திருப்திப்படுத்துவது நல்லது.

ஆன்மிகபதிவுகளை நீங்கள் படிக்கும்போது சும்மா செய்தித்தாள்கள் படிப்பது போல் தயது செய்து படிக்காதீர்கள். ஆன்மிகம் உங்களின் வாழ்க்கையோடு இணைந்தது. ஒவ்வொரு தகவலையும் உள்வாங்கிக்கொண்டு அதனை உங்களின் வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும்.

ஆன்மிகத்தை எத்தனை புத்தகங்களிலும் படித்தாலும் உங்களின் வாழ்க்கையில் அதனை பயன்படுத்தும்போது மட்டுமே அதனை நீங்கள் உணரமுடியும். எங்கள் வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போகிறார் என்ற கதையாக ஆன்மிகப்பதிவுகளை படித்துவிட்டு செல்லவேண்டாம். ஒவ்வொரு ஆன்மிகதளத்திலும் பல பயிற்சிகளை உங்களுக்கு தருகிறார்கள். அதனை நீங்கள் பயிற்சியாக எடுத்துக்கொண்டு செய்யும்போது மட்டுமே உங்களால் பயன் அடையமுடியும்.

நமது தளத்திற்க்கு வருபவர்களுக்கும் என்னால முடிந்த உதவியை உங்களுக்கு தருகிறேன் இதனையும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். எனது பயிற்சியில் எந்தவொரு கட்டுப்பாடும் உங்களுக்கு விதிப்பது இல்லை. நீங்கள் என்னை வந்து சந்திக்கவேண்டும் என்பதும் கிடையாது. நீங்கள் எந்த ஊரில் இருந்தும் இந்த பயிற்சியை எடுத்துக்கொள்ளலாம்.

ஏற்கனவே என்னிடம் ஆன்மிகப்பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கும் நண்பர்களே யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பது போல் நீங்கள் பெற்ற இப்பயிற்சியை அடுத்தவர்களும் பெறவேண்டும் என்பதை உங்களின் மனதில் கொண்டு அடுத்த நண்பர்களை செய்ய சொல்லுங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


No comments: