Followers

Monday, April 22, 2013

வேண்டுகோள்



வணக்கம் நண்பர்களே!
                     ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்க்கு தெய்வத்தின் ஆசி வேண்டும் அப்பொழுது மட்டுமே அந்த மனிதன் முன்னேற முடியும். அந்த தெய்வங்களின் ஆசியை பெறுவதற்க்கு பல ஆத்மாக்களுக்கு நாம் சேவை செய்திருக்கவேண்டும் அப்பொழுது மட்டுமே தெய்வத்தின் ஆசியை நாம் பெறமுடியும். 

நான் தெய்வத்தின் ஆசியை முதலில் பெற்றேன் அதற்க்கு காரணம் எனது குரு தந்த சக்தி. அந்த சக்தியை நான் கூடுதலாக்க உங்களுக்கு சேவை செய்கிறேன் அப்பொழுது எனக்கு அதிகமான சக்தி கிடைக்கிறது. உங்களுக்கு சேவை செய்கிறேன் என்று சொல்லுவது உங்களின் ஆத்மாவின் தேடுதலுக்கு ஒரு விடை தருகிறேன் அது தான் நான் செய்யும் சேவை. இந்த சேவை என்னை மேலும் மேலும் உயர்த்திக்கொண்டு செல்லுகிறது.

பல்வேறு பட்ட ஆன்மீக பயிற்சிகள் இன்று தெரு தெருவாக இருக்கும்போது என்னிடம் வந்து ஆன்மீக பயிற்சி எடுக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள் இதுவே என் வாழ்க்கையில் எதனையோ அடைந்துவிட்டேன் என்று நினைக்க தோன்றுகிறது. நமது தளத்திற்க்கு புது புது நண்பர்கள் வந்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் என்னிடம் சொல்லுவது இன்று தான் உங்களின் தளத்தை பார்வையிட்டேன் என்று சொல்லுகிறார்கள். இது நாள் வரை பார்த்ததில்லை இன்று தான் பார்க்கிறோம் என்று சொன்னார்கள்.

இப்பொழுது வரும நபர்கள் நமது தளத்திற்க்கு போதாத ஒன்று. ஏன் என்றால் பல தளங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது நமது தளத்தின் வரவு மிக குறைவாக இருக்கிறது. அதனால் நண்பர்களே உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நமது தளத்தைப்பற்றி சொல்லுங்கள். 

இன்று வலையுகத்தில் ஆன்மீகபதிவுகள் குறைவாக வருகின்றன. நாத்திகத்தின் வலைதளத்தை பார்த்தால் ஒரு வருடத்திற்க்கு ஆயிரம் பதிவுகளுக்கு மேல் எழுதி தள்ளுகிறார்கள். ஆன்மீக பதிவுகள் குறைவான எண்ணிக்கையில் வருகின்றன. அவ்வாறு இருக்ககூடாது என்ற காரணத்தால் ஒரு நாளைக்கு பல பதிவுகள் கொடுக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளேன். நான் அவ்வாறு கொடுக்கவேண்டும் என்று நினைக்கும்போது நமது தளத்திற்க்கு வரும் நபர்களின் எண்ணிக்கையும் கூடுதலாக இருக்க வேண்டும் அது உங்களின் கையில் உள்ளது.

நமது மதத்தை பொருத்தவரை கொள்கையை பரப்புவதில்லை. அது தானாகவே பரவும். நாம் கற்று நமது சந்ததினருக்கும் இதனை கற்று தரவேண்டும். நீங்கள் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடையவேண்டும் என்றால் அடுத்தவருக்கு சேவை செய்யும் போது மட்டுமே அனைத்தும் வசப்படும்.நமது தளத்தைப்பற்றி அடுத்தவர்களுக்கு சொல்லி நீங்களும் ஆன்மீகவாழ்க்கையில் முன்னேற்றம் அடையுங்கள்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: