Followers

Friday, May 31, 2013

சுக்கிரனுக்கு பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                    சுக்கிரன் தசா வந்தால் நாம் எல்லோரும் மகிழ்ச்சி அடைவோம். சுக்கிரன் தசா நடைபெறபோகிறது நமக்கு இனி அள்ளிக்கொட்ட போகிறார் என்று நினைத்துக்கொண்டு இருப்போம். சுக்கிரன் ஒரு சிலருக்கு மட்டும் நல்லதை செய்வார் ஒரு சிலருக்கு அடித்து கீழே தள்ளிவிடுவார். 

மீனராசிக்கு சுக்கிரன் தசா மிகப்பெரிய கெடுதலை தருவார். உங்களுக்கு சுக்கிரன் தசா நடந்து அதில் இருந்து ஒரு நல்லதும் நடைபெறவில்லை என்றால் என்ன பரிகாரம் செய்வது என்பதை பார்க்கலாம்.

வெள்ளிக்கிழமை அன்று பிராமணர்கள் இல்லாமல் வெறும் சாதாரணமானவர்களால் பூஜை செய்யும் அம்மனை நீங்கள் வணங்கவேண்டும். பல கோவில்கள் இப்படி இருக்கின்றது அந்த கோவிலில் நீங்கள் வணங்கிவர சுக்கிரனின் ஆசி உங்களுக்கு கிடைக்கும். மறந்தும் பிராமணர்கள் இருக்கும் கோவிலுக்கு செல்லகூடாது. 

வெள்ளிக்கிழமையில் அம்மனை நீங்கள் வணங்கினால் சுக்கிரனின் ஆசியைப்பெற்று சுக்கிர தசா உங்களுக்கு செல்வவளத்தை அள்ளி தருவார். பல கிராமங்களில் அம்மனுக்கு பூஜை செய்பவர்கள் பூசாரிகளாக இருப்பார்கள். அந்த அம்மன் பெரும்பாலும் சுயம்பாக இருக்கும். புற்று அம்மனாக கூட இருக்கும். 

சுக்கிரனின் தலம் ஸ்ரீரங்கம் என்று பல பேர் சொல்வார்கள். அங்கு சென்று நீங்கள் வணங்கிவிடவேண்டாம். சுக்கிரன் தனியாக இருக்கும் தலங்களாக இருந்தால் நம்மை பயக்கும். 

நவக்கிரங்களையும் நீங்கள் வணங்கவேண்டாம். நவக்கிரகங்களில் குருவும் இருப்பார் அல்லவா அதனால் இதனை சொல்லுகிறேன். சுக்கிரனுக்கு நல்ல பரிகாரம் அம்மனை வணங்குவது மட்டுமே.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

Anonymous said...

இப்படி மக்களை பயமுறுத்தி.....தங்களை நாடி வரவைப்பதோ.......நல்ல தந்திரம்....


முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.....

பாவகணக்கை கூட்டி கொள்ளாதீர்...

இறை என்ன செய்துவிடும் என்ற நினைப்போ...

Swami said...

வக்கிர சுக்ரன் 7இல் இருந்தால் என்ன பலன்? எப்படி பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லுங்க தல.