Followers

Tuesday, December 2, 2014

அம்மன் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                      நீண்ட இடைவெளிக்கு பிறகு தொடருகிறேன். சொந்த ஊரில் இருந்ததால் இந்த இடைவெளி ஏற்பட்டது. நெட் தொடர்பு இல்லாத காரணத்தால் உங்களுக்கு என்னால் பதிவை தரமுடியவில்லை. இனி முடிந்தளவு தொடர்ந்து பார்க்கலாம்.

முதலில் நல்ல விசயத்தை பார்த்து விடலாம். கார்த்திகை மாதத்தில் நமது அம்மனுக்கு பூஜையை செய்ய உகந்த நாள் தேர்ந்தெடுக்கலாம் என்று எண்ணினேன். முதலில் இந்த மாதத்தில் கார்த்திகை தீபநாள் வருவதால் அந்த நாளை தவிர்த்து விட்டு அடுத்த வாரத்தில் ஒரு நாள் பார்த்து பூஜை வைத்துவிடலாம் என்று இருக்கிறேன்.

தீபம் அன்றே பூஜை வைக்கலாம் என்றால் நமது அன்றைய நாளில் பூக்களின் விலை அதிகமாக இருக்கும். அன்றைய நாளில் அனைவரும் பிஸியாக வேறு இருப்பார்கள். அதனை தவிர்த்து அடுத்த வாரத்தில் செய்யலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்.

இதுவரை நமது அம்மனிடம் வேண்டுதல் வைத்து அதனை அம்மன் நடத்திக்கொடுத்தவர்கள் மட்டும் இந்த பூஜைக்கு தங்களால் இயன்ற பணஉதவியை செய்யலாம்.புதிய வேண்டுதலை வைப்பவர்கள் பூஜை நடக்கும் நாளில் வேண்டுதலை வைத்துக்கொள்ளுங்கள். 


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: