Followers

Tuesday, August 25, 2015

காயத்ரி மந்திரம்


வணக்கம்!
          காயத்ரி மந்திரம் செய்ய நினைத்து என்னிடம் போனில் தொடர்புக்கொள்பவர்கள் ஒன்றை சொல்லுவார்கள். சார் நான் உங்களிடம் ஜாதகம் பார்க்கிறேன் என்பார்கள். 

காயத்ரி மந்திரம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கும்பொழுது ஜாதகத்தை பற்றி கவலைக்கொள்ளவேண்டாம். இறை சக்தியை தேடி வருபவர்கள் ஜாதகத்தைப்பற்றி கவலை வேண்டாம். அந்த இறைசக்தியை மந்திர ஜெபத்தால் பெற்று கிரகத்தை வென்றுவிடலாம்.

காயத்ரி மந்திரத்தை செய்தால் எனக்கு பணம் தரவேண்டும் என்பதில்லை. உங்களின் நேரத்தை செலவு செய்து ஜாதககதம்பத்தை படிக்கிறீர்கள். எத்தனையோ பிளாக் நெட்டில் வந்துக்கொண்டு இருக்கின்றது. அதனை எல்லாம் மீறியும் இதனை படிப்பதற்க்கு நான் செய்யும் ஒரு கைங்கரியமாக உங்களுக்கு இருக்கட்டும் என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன்.

தற்பொழுது புதிய பிளாக் தொடங்கியுள்ளேன் அது கட்டண சேவை. தற்பொழுது அதில் இணைவதற்க்கு பணம் இல்லை ஆனால் எதாவது ஒரு ஆன்மீகப்பயிற்சி செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் காயத்ரி மந்திரத்தை செய்துக்கொண்டு இருக்கலாம். பணம் வரும்பொழுது அதில் இணைந்துக்கொள்ளலாம்.

காலத்தை வீண் செய்துக்கொண்டு இருக்காமல் ஏதாவது ஒரு ஆன்மீகப்பயிற்சியை செய்துக்கொண்டு இருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Vishnu - விஷ்ணு said...

பதிய பிளாக்கின் முகவரியை தெரிவியுங்கள் அய்யா...