Followers

Monday, September 14, 2015

துணைவரின் குணம்


ணக்கம்!
          நமக்கு வரும் மனைவி அதாவது துணைவரைப்பற்றி அறிய ஏழாவது வீட்டை பார்ப்பார்கள். அந்த துணைவர் எப்படிப்பட்ட குணத்தோடு வருவார் என்பதை பாக்கியஸ்தானத்தை கொண்டு தான் ஒரு சில நல்ல விசயத்தை அறியமுடியும்.

அவன் பாக்கியம் செய்து இருக்கிறான் நல்ல குணத்தோடு அவனின் மனைவி அமைந்திருக்கிறாள் என்று பேச்சு வாக்கில் சொல்லுவார்கள். அதற்கு எல்லாம் ஒன்பதாவது வீடு தான் வழி செய்யவேண்டும்.

எப்படிப்பட்ட கணவனையும் நல்ல வழியில் முன்னேற்றம் அடைய செய்த பெண்களும் இருக்கின்றார்கள். கணவனின் ஜாதகத்தில் அப்படிப்பட்ட பாக்கியம் அமைந்திருக்கும்.

ஒரு சிலருக்கு திருமணம் ஆவதற்க்கு முன்பு நன்றாக இருப்பார்கள். திருமணம் முடிந்தபிறகு அவனின் வாழ்க்கை சீரழிந்துவிடும். அவனுக்கு கொடுத்த பாக்கியம் அவ்வளவு தான். ஒரு சிலருக்கு திருமணம் செய்த பிறகு கொஞ்ச நாளில் மனைவி இறந்துவிடுவாள். அது அவன் செய்த பாக்கியம்.

ஒன்பதாவது வீடு கெட்டால் ஒருவனுக்கு அமையும் வாழ்க்கை துணை அவனுக்கு எதிராக கிளம்பிவிடுவார். இவன் ஒன்றை நினைத்துக்கொண்டு இருப்பான். அவனின் வாழ்க்கை துணை ஒன்றை அவனுக்கு எதிராக செய்துக்கொண்டு இருப்பாள்.

பாக்கியம் நன்றாக அமைந்தால் அனைத்தும் கிடைக்கும். அப்படி கிடைக்கவில்லை என்றால் நமது ஜாதகத்தை ஒரு கை பார்க்கவேண்டும். அதாவது சரிசெய்யவேண்டும். அதற்கும் பாக்கியம் இருக்கவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: