Followers

Monday, September 28, 2015

தடையை உடைக்கும் பாக்கியம்


வணக்கம்!
          மனிதனுக்கு ஏற்படும் தடைகளைப்பற்றி பாக்கியஸ்தானத்தில் பார்த்துக்கொண்டு வருகிறோம். நாம் எதனைப்பார்த்தாலும் அது சம்பந்தமான நிகழ்வுகள் நடப்பது இயற்கையான ஒன்றாக இருக்கும். 

நாளை முதல் மஹாளயபட்ச நாட்கள் ஆரம்பம் என்று காலண்டரில் போட்டு இருப்பார்கள். இன்றே ஆரம்பித்துவிட்டது. பாக்கியஸ்தானத்திற்க்கு பரிகாரம் செய்வதற்க்கு இந்த நாட்கள் ஒரு ஏற்ற நாட்களாக இருக்கும். நாம் செய்யும் பரிகாரம் நமக்கு புண்ணியமாக அமையவதற்க்கு இந்த நாட்கள் ஒரு சரியான நாட்களாகவே இருக்கும்.

உங்களுக்கு காரிய தடை அதிகம் ஏற்பட்டால் இந்த நேரத்தில் அதற்கு என்று பரிகாரம் செய்துக்கொள்ளுங்கள். திதி கொடுப்பது என்ற வழிமுறை இருக்கும். திதி மட்டும் இல்லாமல் பல வழிகளை நெட்டில் தேடினால் என்ன என்ன செய்யலாம் என்று எழுதியிருப்பார்கள். அதனை பார்த்து செய்துக்கொள்ளுங்கள்.

உங்களின் ஜாதகத்திற்க்கு தகுந்தவாறு இந்த பரிகாரத்தை செய்வது நல்லது. கடுமையான பித்ருதோஷம் இருக்கின்றது என்று நீங்கள் நினைத்தால் அதற்கு தகுந்த பரிகாரத்தை செய்யவேண்டும். உங்களின் ஜாதகத்தை என்னிடம் காண்பித்து செய்துக்கொள்ளலாம்.

வருகின்ற அமாவாசை வரை புண்ணியம் சேர்க்கும் நாட்களாகவே உங்களுக்கு அமையும். நல்ல நாட்களை தவறவிடவேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: