Followers

Thursday, September 24, 2015

கலவை


ணக்கம்!
          நேற்று எழுதிய சித்தர்கள் பதிவை படித்துவிட்டு பல நண்பர்கள் பாராட்டி எழுதினார்கள். ஒரு சிலர் சித்தர்களின் வழியை மேலும் நிறைய தகவலை தாருங்கள் என்று கேட்டார்கள்.

எந்த ஒரு வழியையும் நான் தவறு என்று சொல்லவில்லை. அனைத்து வழியும் நல்லவழிதான் ஆனால் காலத்திற்க்கு தகுந்த மாதிரி அதனை நாம் பயன்படுத்த வேண்டும். காலத்திற்க்கு தகுந்த மாதிரி மாற்றி பயன்படுத்தமுடியவில்லை என்றால் நமக்கு அதுவே பிரச்சினை தருவதாக அமைந்துவிடும்.

மனிதனுக்கு நாடி பார்ப்பது எல்லாம் சித்தர்களின் வழிகாட்டுதல் படி தான் நான் கற்றேன். சித்தர்கள் சொன்னதில் பல நல்லவை இருக்கின்றது அதனை நாம் சரியான முறையில் கற்கவேண்டும். சித்தர்கள் சொன்ன பல நல்ல சிந்தனைகளை அவ்வப்பொழுது உங்களுக்கு சொல்லுகிறேன்.


முகநூல் பக்கம் நீங்கள் வருவதில்லை என்று நண்பர் ஒருவர் கேள்வி கேட்டு அனுப்பிருந்தார். நான் பிளாக் மட்டும் தான் எழுதுவது உண்டு. முகநூலில் பக்கம் வருவது கிடையாது. பிளாக்கை அதில் இணைக்க மட்டும் தான் அந்த பக்கம் வருகிறேன்.


பாக்கிஸ்தானம்
               தந்தை நல்லது செய்தால் இந்த ஸ்தானம் நமக்கு நல்லது கொடுக்கும். தந்தை சரியில்லை அதாவது ஊரில் உள்ள பிரச்சினை எல்லாவற்றையும் செய்து வைத்திருந்தால் உங்களுக்கு பாக்கியஸ்தானம் தடையை தான் ஏற்படுத்தும்.

ஒரு சிலருக்கு தந்தை சரியில்லாமல் இருப்பார்கள். அதாவது சம்பாதிக்காமல் அவர் காலத்தை ஓட்டிக்கொண்டு இருப்பார் ஆனால் அவரின் பையன் நன்றாக வாழுவான். எப்படி என்றால் சம்பாதிக்காமல் இருந்தால் கூட அடுத்தவர்களுக்கு பிரச்சினை கொடுக்காமல் இருந்திருப்பார் அதனால் அவரின் பையன் நன்றாக வாழ்வார்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: