Followers

Friday, September 25, 2015

கிரிவலம்


ணக்கம்!
          நீண்ட நாள்களாக திருவண்ணாமலை கிரிவலம் சென்று வரவேண்டும் என்று ஒரு எண்ணம் உருவானது. அதற்கு வாய்ப்பை உருவாகவில்லை. தற்சமயம் அதற்கான வாய்ப்பு நெருங்கி வருகின்றது என்று உள்மனம் உறுதியாக சொல்லுகின்றது.

நான் பலதடவை திருவண்ணாமலை கிரிவலம் சென்று வந்து இருக்கிறேன். ஒவ்வொரு தடவை செல்லும்பொழுதும் எனக்குள் ஒரு நல்ல மாற்றம் நடப்பது உறுதியாக தெரியும். அதே நேரத்தில் பல நல்ல ஆசிகளையும் அந்த தலத்தில் இருந்து எனக்கு கிடைத்தது.

பழைய பதிவில் பல நல்ல தகவல்கள் திருவண்ணாமலையை பற்றி சொல்லிருக்கிறேன். ஜாதககதம்பத்தில் இருந்து பல நண்பர்களை அந்த தலத்தில் வைத்து சந்தித்து இருக்கிறேன்.

எல்லா பெளர்ணமி நாட்களிலும் கிரிவலம் செல்வது நல்லது. இன்றைய அவசர உலகத்தில் அது சாத்தியப்படும் என்பது கடினம் இருந்தாலும் வருடத்திற்க்கு ஒரு முறையாவது சென்று வருவது நல்லது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: