Followers

Tuesday, September 29, 2015

குலதெய்வம்


ணக்கம்!
          குலதெய்வத்தைப்பற்றி ஒரு நண்பர் கேள்வி கேட்டார். குலதெய்வம் என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று அதனைப்பற்றி கேட்டார்.

குலதெய்வம் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால் நீங்கள் சோதிடர்களிடம் அல்லது பிரசன்னம் பார்ப்பவர்களிடம் சென்று குலதெய்வத்தை கண்டுபிடித்து கொடுங்கள் என்று கேட்டால் அவர்களுக்கு தெரிந்த தெய்வத்தை சொல்லுவார்கள். அனைவரும் குத்து மதிப்பாக சொல்லுவார்கள். 

உங்களின் குலதெய்வத்தைப்பற்றி உங்களின் குடும்பத்தில் உள்ள மூத்தோர்களிடம் மட்டும் கேட்டு தெரிந்துக்கொள்ளமுடியும். உங்களின் குடும்பத்தில் உள்ள பங்காளிகள் வழியாகவும் கேட்டுக்கொள்ளலாம்.

உங்களின் அப்பா வழி குலதெய்வம் தெரியவில்லை என்றால் உங்களின் அம்மா வழி குலதெய்வத்தை வணங்கலாம். அம்மா வழியில் உள்ள தெய்வத்தை வைத்து வழிபட்டு வரலாம். பச்சைப்பரப்புதலும் செய்து வழிப்பட்டு வரலாம்.

உங்களின் அப்பா வழி குலதெய்வமும் அம்மா வழி குலதெய்வமும் ஏதாவது தொடர்பு இருப்பது போல் இருக்கும். நமது குலதெய்வத்தின் கோவிலை ஆராய்ந்து பார்த்தாலே அந்த தெய்வமும் இருக்கும். அப்பா வழியின் தெய்வத்தை பற்றி எந்த ஒரு தகவலும் தெரியவில்லை என்ற பட்சத்தில் அம்மா வழி குலதெய்வத்தை வணங்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: