Followers

Tuesday, September 15, 2015

நிலம்


வணக்கம்!
         நிலத்தைப்பற்றி ஏற்கனவே நான் சொல்லிருக்கிறேன். மறுமுறையும் இந்த கருத்தை சொல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. அதாவது நான் பார்க்கும் விசயத்தில் இருந்து பதிவை தருவேன்.

அண்ணன் தம்பி இருவர் ஒரு குடும்பத்தில் இருந்தால் அதில் ஒருவர் ஒருவரை ஏமாற்றி நிலத்தை புடுங்குவது பல இடத்திலும் நடக்கிறது. இது அடிக்கடி எனது கவனத்திற்க்கு வரும்பொழுது அதனைப்பற்றி பதிவில் சொல்லுகிறேன்.

உங்களுக்கு உள்ள நிலத்தை மட்டும் எடுத்துக்கொண்டு பிறர்க்கு தேவையான நிலத்தை கொடுத்துவிடுங்கள். தேவையில்லாமல் ஒருவரை நிலம் வழியாக ஏமாற்றும்பொழுது உங்களின் சந்ததினர்க்கு மிகப்பெரிய பாவத்தை சேர்த்து வைத்துவிடுகிறீர்கள்.

குறிப்பாக கிராமபுறங்களில் இது அதிகம் நடக்கிறது. உங்களுக்கு தேவையான சொத்து கண்டிப்பாக உங்களால் சேர்க்க முடியும். உங்களின் உழைப்பால் சொத்துக்கள் சேர்க்கும்பொழுது நீங்களும் உங்களின் வாரிசும் நன்றாக வாழலாம். 

நமது திறமையை வைத்து பிறரின் நிலத்தை பிடிங்கினால் செவ்வாய்கிரகம் உங்களின் உடலில் இருந்து ஏதாவது ஒரு பாகத்தை பிடிங்கி எடுக்கவைக்கும். உங்களின் குடும்பம் சிதைந்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: