Followers

Friday, September 18, 2015

புரட்டாசி சனிக்கிழமை


வணக்கம்!
          நாளை முதல் புரட்டாசி சனிக்கிழமை விரதம் ஆரம்பமாகிறது. பெருமாளுக்கு உகந்த விரதமாக இது இருக்கும். பெரும்பாலான கிராமங்களிலும் கூட இந்த விரதம் இருப்பார்கள். பெருமாள் என்றாலே சுத்தமாக இருந்து விரதத்தை அனுசரிப்பார்கள்.

பெருமாளுக்கு விரதம் இருந்து நல்ல முறையில் வாழ்க்கை அமைந்தவர்கள் உண்டு. அதே நேரத்தில் இந்த விரதத்தில் சுத்தம் இல்லை என்றால் பெருமாள் அதிக சோதனையை தருவார் என்று கேள்விபட்டு இருக்கிறேன்.

பெருமாளோடு அனுக்கிரகம் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என்றால் இந்த மாதத்தில் விரதம் இருக்கவேண்டும். விரதம் இருப்பவர்கள் ஒரு முறை திருப்பதி அல்லது அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிப்பட்டு வரவேண்டும்.

நான் விரதம் இருப்பது கிடையாது ஆனால் புரட்டாசி மாத சனிக்கிழமை அன்று ஏதாவது ஒரு பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவேன். நீங்களும் விரதம் இருந்தால் இருங்கள் அப்படி இல்லை என்றால் சனிக்கிழமை அன்று ஒரு பெருமாள் கோவிலுக்கு சென்று வழிப்பட்டு வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: