Followers

Monday, September 28, 2015

கிரிவல அனுபவம்


வணக்கம்!
          திருவண்ணாமலை கிரிவலம் நேற்று காலை நான்கு மணிக்கு செல்ல ஆரம்பித்துவிட்டேன். திருவண்ணாமலையில் தங்கும் அறை கிடைப்பதற்க்கு சிரமமாக இருந்தது. நேற்று காலை பத்து மணிக்கு எல்லாம் தங்கும் அறையை விட்டு செல்லவேண்டும் என்ற நிபந்தனையோடு அறையை புக் செய்த காரணத்தால் உடனே கிரிவலம் செல்லும் நேரத்தையும் மாற்ற வேண்டியதாகிவிட்டது.

பல நண்பர்கள் நேற்று தான் என்னை தொடர்புக்கொண்டார்கள். பல நண்பர்கள் திருவண்ணாமலை வந்தவுடன் தான் போன் செய்கிறார்கள். அவர்களை சந்தித்து அவர்களோடு கிரிவலம் செல்லவேண்டும் என்ற ஆசை நடக்கவில்லை. ஒரு நண்பரோடு மட்டும் தான் கிரிவலம் சென்றேன்.

குறைந்தது ஒரு வருடகாலத்திற்க்கு பிறகு தற்பொழுது தான் கிரிவலம் சென்றேன். அடுத்த முறை பெளர்ணமி இல்லாத நேரத்தில் கிரிவலம் சென்று கோவிலையும் தரிசனம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

கிரிவலம் சென்ற புகைப்படத்தை முகநூலில் நேற்று வெளியிட்டேன். நீங்கள் பார்த்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இனி முகநூலில் நான் செல்லும் கோவில்களைப்பற்றி புகைப்படமும் அவ்வப்பொழுது வரும் உடனே நீங்கள் அதனைப்பார்த்து தரிசனமும் செய்துக்கொள்ளலாம்.

அடுத்த முறை திருவண்ணாமலை செல்லும் தேதியை அறிவித்தவுடன் உடனே என்னை தொடர்புக்கொண்டு நீங்கள் வருவதாக இருந்தால் தெரிவித்துவிடுங்கள்.

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதியில் உள்ள நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளுங்கள். இந்த வாரத்தில்  ஒரு நாளில் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: