Followers

Tuesday, September 22, 2015

பொதுவானவை


ணக்கம்!
          நேற்று காலையில் தான் திருப்பூரில் இருந்து புறப்பட்டு வந்தேன். வீடு வந்து சேருவதற்க்கு இரவு ஆகிவிட்டது. பயண களைப்பால் உங்களுக்கு பதிவை தரமுடியவில்லை. 

என்னை கூப்பிட்ட பாதி நண்பர்களை சந்திக்கமுடியவில்லை. நேரமின்மை தான் அதற்கு காரணம் விரைவில் அடுத்த சந்திப்பிற்க்கான அறிவிப்பை அறிவிக்கிறேன். ஒவ்வொருவரையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யவேண்டும் என்று எண்ணம் இருக்கின்றது.

படிப்பு சம்பந்தமாக ஒரு சில நண்பர்களின் குழந்தைகளை சந்தித்துக்கொண்டு இருக்கின்றேன். படிப்பு சொல்லிக்கொடுக்க பள்ளிகூடம் கட்டமுடியவில்லை என்றாலும் நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று தான் ஆன்மீகவழியில் உதவி செய்துக்கொண்டு இருக்கின்றேன். இது முற்றிலும் இலவச சேவை.

முகநூலில் ஜாதககதம்பத்தை லைக் செய்ய சொல்லிருந்தேன். பல நண்பர்கள் அதனை செய்கின்றார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. தொடர்ந்து செய்யுங்கள். இதுவரை செய்யாத நண்பர்களுக்கும் இதனை செய்யுங்கள்.


ஒருவருக்கு அஷ்டமசனி நடைபெற்றால் சம்பந்தப்பட்ட நபருக்கு பரிகாரம் செய்வது கிடையாது. அதற்கு காரணம் அஷ்டமசனி காலத்தில் ஒருவருக்கு பரிகாரம் அந்தளவுக்கு வேலை செய்வதில்லை. கோவிலுக்கு மட்டும் சென்று வாருங்கள் என்று மட்டும் அறிவுறுத்தபடுவது உண்டு.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: