Followers

Sunday, September 6, 2015

பித்ருதோஷமும் வறுமையும்


ணக்கம்!
          இளம்வயதில் உள்ள நண்பர்களை சந்திக்கும்பொழுது ஒரு சிலர் தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் சொல்லி புலம்புவார்கள். ஒரு சிலருக்கு கஷ்டங்களை சொல்லுவதற்க்கு கூட அவர்களுக்கு என்று அக்கறை காட்ட குடும்பத்திலும் சரி நண்பர்கள் வட்டத்திலும் சரி ஆட்கள் இல்லை.

இவர்களின் கஷ்டத்தை சொல்லுவதற்க்கு என்று என்னிடம் வந்து பல மணி நேரம் புலம்புவார்கள். நானும் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைப்பது உண்டு.

இளம் வயதில் கஷ்டம் என்பது ஒரு கடுமையான தண்டனை தான். சொல்லபோனால் மிகப்பெரிய பாவமும் அது தான். அந்த கஷ்டத்தை எல்லாம் தாங்கிக்கொண்டு இருந்தால் வாழ்க்கையின் பின் பகுதி மிகுந்த வசதி படைத்தவர்களாக இருப்பதற்க்கு சோதிடத்தில் வழி உண்டு.

இளம் வயதில் அதிக கஷ்டத்திற்க்கு உள்ளாவதற்க்கு சோதிடத்தில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் பித்ரு தோஷம் மிகப்பெரிய அளவில் பாதிக்கும். இளம் வயதில் கடுமையான வறுமையை தந்து பின் பகுதியில் அதிக செல்வாக்கை கொடுக்கும்.

இளம்வயதில் வறுமையை கொடுக்கும் நேரத்தில் நீங்கள் மதுபழக்கத்திற்க்கு மற்றும் தீயபழக்கத்திற்க்கு ஆளாக கூடும். அந்த இடத்தில் மட்டும் கவனம் தேவை. உங்களின் முழுசக்தியும் ஒருங்கிணைக்கும்பொழுது மட்டுமே பின்னாளில் வெற்றி பெறமுடியும். நினைத்து பார்க்க முடியாத அளவிற்க்கு வளர்ச்சி இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

nallur parames said...

Naanum silarai parthirukkiren.