Followers

Tuesday, September 29, 2015

தொழில் வெற்றி


ணக்கம்!
          நேற்று கூட ஒரு நண்பரை சந்தித்து பேசிக்கொண்டு இருக்கும்பொழுது சொன்னார் நன்றாக சென்றுக்கொண்டு இருந்த தொழில் சமீபமாக சரிவை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கின்றது. வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கின்றது. ஒரு சில நாட்களில் மிகவும் கஷ்டமாக இருக்கின்றது என்று சொன்னார்.

ஒரு வேலைக்கு சென்று மாத சம்பளம் பெறுவது எளிது ஆனால் ஒரு தொழில் செய்து அதன் வழியாக வாழ்க்கையை நடத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக தான் இருக்கும். 

எல்லாேரும் தொழில் செய்கின்றார்கள் என்று நாமும் அதில் இறங்கி நமது கையிருப்பு பணத்தை இழப்பதும் உண்டு. ஒரு தொழில் செய்வது என்றால் மிகவும் எச்சரிக்கையோடு எந்த நேரமும் செயல்படவேண்டும். வேலைக்கு போகின்றவர்கள் கடவுளை கும்பிடாமல் இருந்தால் கூட தொழில் செய்கின்றவர்கள் தினமும் தெய்வத்தை கும்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

இன்றைக்கு முஸ்லீம் மக்கள் தொழிலில் வெற்றிபெறுவதற்க்கு அவர்களின் தொழுகை தான் காரணமாக இருக்கும். நம்ம ஆட்கள் கோவிலுக்கு செல்வதே ரொம்ப கடினம். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை கோவிலுக்கு செல்வது வழக்கமாக இருந்தால் கூட தொழிலில் வெற்றி பெற்றுவிடமுடியும்.

நமது அம்மனை வைத்து தொழில் செய்பவர்களுக்கு பூஜை செய்து கொடுக்கிறேன். குறுந்தொழிலாக இருந்தாலும் பெரிய தொழிலாக இருந்தாலும் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். நல்ல முன்னேற்றம் இதில் இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: