Followers

Wednesday, January 25, 2017

எந்த முன்னேற்றமும் இல்லை


வணக்கம்!
          நிறைய பேர்கள் என்னிடம் சொல்லும் வார்த்தை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை மற்றும் சொல்லுவார்கள். இதுவரை நிறைய கோவில்கள் மற்றும் ஆன்மீகபயிற்சி எல்லாம் செய்துவருகிறேன் ஆனால் முன்னேற்றம் இல்லை என்பார்கள்.

இதுவரை பல பேர்கள் சொல்லும் இந்த கருத்தை இன்று காலை ஒரு நண்பர் கேள்வி கேட்டார். அதனை உங்களிடம் சொல்லுவதற்க்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. நாம் ஒன்றை கவனிக்க தவறிவிடுகிறோம்.

நாம படித்தது அரசு பள்ளியில் அந்த பள்ளியில் ஆசிரியர் வந்து கிளாஸ் எடுத்ததை எல்லாம் இன்று நினைத்தாலும் நமக்கே சிரிப்பு வந்துவிடும். அந்தளவுக்கு மோசமான ஒரு பள்ளியை படித்து கரை சேர்ந்து வந்து இருக்கலாம்.

உங்களின் குழந்தையை பாருங்கள். அதனை எப்பேர்ப்பட்ட பள்ளியில் படித்து வைத்துக்கொண்டு இருக்கின்றோம் என்று கொஞ்சம் பார்த்தால் நாம் முன்னேற்றம் அடைந்துக்கொண்டு தான் வருகின்றோம் என்று உங்களுக்கு தெரியும்.

நம்ம தந்தை நமக்கு என்று பெரிதாக செய்யவில்லை ஆனால் நம்முடைய வாரிசுக்கு நாம் பெரிதாக செய்துக்கொண்டு வருகிறோம். நம்முடைய வாழ்க்கை தியாகவாழ்க்கை ஆனால் நமது வாரிசுகளின் வாழ்க்கை ஜாலி வாழ்க்கையை அமைத்துக்கொடுத்து இருக்கிறோம்.

நாம் புண்ணியத்திலும் சரி பணத்திலும் சரி நிறைய நமது வாரிசுகளுக்கு சேர்க்கிறோம் என்பது தான் நீங்கள் செய்யும் இந்த வேலைகள் எல்லாம் என்பதை கொஞ்சம் சிந்தித்தால் உங்களுக்கு புரியும்.

நீங்கள் உழைக்கும் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமைவதற்க்கு கொஞ்சநாள்கள் ஆகும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு அனைத்தையும் செயல்படுங்கள். புண்ணியமும் பணமும் உங்களின் வாழ்க்கையும் மற்றும் கண்டிப்பாக உங்களின் வாரிசுகளுக்கும் ஒரு நிரந்தர நல்லவாழ்க்கை கொடுக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

KJ said...

Sir, Good evening.

But our fathers were living peacefully... But now we are running with machine life and after few years, v will be realising thta v have lost our happiness for earning Money. Very pathetic but true.