Followers

Tuesday, September 8, 2015

கேட்பது கிடைக்கும் நினைப்பது நடக்கும்


வணக்கம்!
          இன்று காலை திருச்சிக்கு அருகில் இருக்கும் வயலூர் முருகனை தரிசனம் செல்ல சென்றுருந்தேன். காலையில் தரிசனத்தை முடித்துவிட்டு தற்பொழுது தான் வந்தேன்.

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வசதி இருக்கின்றது. குறைந்தது அரை மணி நேர பயணத்தில் கோவிலை அடைந்துவிடலாம். 

கேட்பது கிடைக்கும் நினைப்பது நடக்கும் என்று இந்த திருகோவிலைப்பற்றி சொல்லுகிறார்கள். கோவிலைப்பற்றி பல சிறப்புகள் சொல்லுகிறார்கள். மிக பழமையான கோவில் தான் இது. இந்த ஊரை பார்ப்பதற்க்கும் மிகவும் நன்றாக உள்ளது.

மழைக்காலம் ஆரம்பித்தால் நிறைய கோவில்களை தரிசனம் செய்ய செல்வேன். எனக்கு வெயில் காலம் சரிப்பட்டு வராது என்பதால் மழை காலமாக பார்த்து கோவில் தரிசனம் செய்வது உண்டு. 

ஏனோ திடீர் என்று இந்த கோவிலைப்பற்றி எனது வாயாலே சொல்ல வைத்தது. இந்த கோவில் எங்கு இருக்கின்றது என்பதை பிறகு நெட்டில் தேடிப்பார்த்தேன். அதன் பிறகு தான் இந்த கோவிலுக்கு சென்றேன். கடந்த வாரம் வரை இப்படிப்பட்ட ஒரு கோவில் இருக்கின்றதா என்று கூட எனக்கு தெரியாது. இன்று சென்று வந்துவிட்டேன். 

திருச்சி பக்கம் செல்வதாக இருந்தால் அப்படியே இந்த கோவிலையையும் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். முருகனின் அருள் கிடைக்கபெறுவீர்கள்.



அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

nallur parames said...

Muruga muruga un perumai enna solli pesuven.