Followers

Monday, January 11, 2016

தொழிலாளி பாக்கியம்


ணக்கம்!
          பாக்கியாதிபதி ஆறாவது வீட்டில் சம்பந்தப்படும்பொழுது எப்படிப்பட்ட பாக்கியம் கிடைக்கும் என்பதை பல பதிவில் பார்த்து வருகிறோம். தொடர்ந்து இப்பதிவிலும் அதனோடு சம்பந்தப்பட்ட ஒரு சில கருத்தை பார்க்கலாம்.

நாம் ஒரு தொழில் நடத்திவந்தால் அந்த தொழில் நன்றாக நடக்கவேண்டும் என்றால் தொழிலுக்கு அமையும் தொழிலாளி நன்றாக அமையவேண்டும். நன்றாக அமையவில்லை என்றால் தொழில் நஷ்டத்தை ஏற்படுத்தும். 

பாக்கியஸ்தானம் ஒரு சிலருக்கு நன்றாக அமையும்பொழுது நமக்கு அமையும் தொழிலாளியும் நன்றாக அமைவார்கள். ஒரு சிலருக்கு பாக்கியஸ்தான அதிபதி ஆறாவது வீட்டோடு சம்பந்தம்பொழுது நல்ல தொழிலாளி அமைவார்கள்.

இன்றைய காலத்தில் கோடிக்கணக்கில் முதலீடு போட்டாலும் அங்கு வேலை செய்யும் தொழிலாளி சரியில்லை என்றால் போட்ட முதலீடு அனைத்து முடிந்தது என்று அர்த்தம் கொள்ளவேண்டியது தான். பல கம்பெனிகளை வீழ்ந்த கதை எல்லாம் தொழிலாளர் பிரச்சினையால் தான் நடந்திருக்கிறது. 

ஒரு வேலைக்காரன் நன்றாக அமைவது கூட நமக்கு கடவுள் தந்த பாக்கியம் தானே தவிர வேறு ஒன்றும் கிடையாது. பல இடங்களில் வேலைக்காரர்களால் தான் முதலாளியின் உயிருக்கே கெடுதல் விளைகிறது. 

பாக்கியம் நன்றாக இருக்கும்பொழுது உங்களுக்கு தொழிலாளிகளால் லாபம். பாக்கியம் சரியில்லை என்றால் தொழிலாளிகளால் பிரச்சினை தான். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: