Followers

Wednesday, January 13, 2016

பதிவு எழுதும் நண்பர்களுக்கு


ணக்கம்!
          நண்பர் ஒருவர் என்னை தொடர்புக்கொண்டு உங்களின் பதிவை ஒரு பிளாக்கில் எடுத்து போட்டுள்ளனர் என்று சொன்னார். அதுவும் நமது அம்மனின் போட்டோவை போட்டு பதிவிட்டுள்ளனர் என்று சொன்னார்.

நம்ம ஆளுங்க உருபடாமல் போவதே இந்த மாதிரி செயலால் தான். ஒவ்வொருவரும் தனக்கு என்ன தெரியுமோ அதனை சொன்னால் நமது மக்களுக்கு புதுவிதமான கருத்துக்கள் கிடைக்கும். உங்களால் பல பேர் நன்மை அடைவார்கள். ஒருவர் எழுதியதை எடுத்து போட்டால் அதில் என்ன கிடைக்கும்?

சோதிடமாக இருந்தாலும் சரி ஆன்மீகமாக இருந்தாலும் சரி அடிப்படை கருத்து ஒன்றாக தான் இருக்கும் ஆனால் அவர்களின் பார்வையில் அது படும்பொழுது அடிப்படையான கருத்தை தற்பொழுது உள்ள மாதிரி கொடுக்கமுடியும். எனது பார்வையில் ஒருவிதமாக படும் கருத்து உங்களின் பார்வையில் புதிய கருத்தாக வரலாம். அது எளிய மக்களை சென்றடையும்.

என்னுடைய பதிவை படியுங்கள் உங்களின் மனதில் புதியதாக கருத்து உருவானால் அதனை உங்களின் பிளாக்கில் எழுதுங்கள். உங்களுக்கு ஒரு அந்தஸ்து கிடைக்கும். அதனைவிட்டுவிட்டு என்னுடைய பதிவை அப்படியே உங்களின் பதிவில் போடும்பொழுது கண்டிப்பாக பல நண்பர்கள் படித்துவிட்டு உங்களை கீழ்தனமாக எண்ணுவார்கள்.

பல நண்பர்கள் வெளிபடையாக எழுதாமல் போனதற்க்கு காரணமே பதிவை திருடி போடுவது தான். பல நல்ல விசயம் நமக்கு கிடைக்காமல் சென்றதே இந்த மாதிரியான வேலையால் தான். பல நல்ல தகவல்கள் நமக்கு கிடைக்காமல் போய்விட்டது என்ற வருத்தம் எனக்கே இருக்கும்பொழுது நமது நண்பர்களின் நிலை எல்லாம் எப்படி இருக்கும்.

ஜாதககதம்பத்தில் உள்ள பதிவை எடுத்து போட்டு இருந்தால் தயவு செய்து அதனை நீக்கிவிட்டு உங்களின் பதிவை நீங்களே எழுதுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். நம்ம மக்களுக்கு நாம் தான் சேவை செய்யவேண்டும். செய்வதை தடை செய்ய நினைக்காதீர்கள் பதிவு எழுதும் நண்பர்களே.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: