Followers

Thursday, January 14, 2016

பாக்கியஸ்தானம் தரும் குரு


ணக்கம்!
          பாக்கியஸ்தானத்தை வைத்து உங்களுக்கு வரும் குருவைப்பற்றி தெரிந்துக்கொள்ளலாம் என்று சொல்லிருந்தேன். குரு சிஷ்யனைப்பற்றி இதுவரை பார்த்தோம். பாக்கியஸ்தானத்தில் நல்ல கிரகங்கள் இருந்தால் உங்களுக்கு நல்ல குரு அமைவார் என்று சொல்லலாம். தீமையான குரு இருந்தால் குரு நன்றாக அமையமாட்டார் என்று சொல்லிவிடுவார்கள்.

குருவை எல்லாம் தேடிச்செல்லும் பாக்கியம் என்பது லட்சத்திற்க்கு ஒருவருக்கு அமையலாம். நான் சொல்லுவது ஆன்மீகத்திற்க்கு அதுவும் இன்றைய காலத்தில் இதற்கு எல்லாம் நேரம் இருக்குமா என்று கேட்கலாம்.

எவ்வளவே வேலை இருந்துக்கொண்டு ஜாதககதம்பம் படிக்க வருகிறீர்கள் என்றால் சும்மா கண்டிப்பாக சோதிடம் மற்றும் ஆன்மீகத்தில் உள்ள விரும்பத்தில் தானே. எத்தனையே பல்வேறு துறை சம்பந்தப்பட்ட பதிவுகள் வரும்பொழுது இந்த துறையை தேர்ந்தெடுத்து வரும்பொழுது கண்டிப்பாக விருப்பப்பட்டு தான் வருகின்றீர்கள்.

தீமையான கிரகங்கள் பாக்கியஸ்தானத்தில் அமைந்தாலும் குரு நன்றாக அமைவார் என்ன ஒன்று என்றால் உங்களுக்கும் உங்களின் குருவுக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு வந்துக்கொண்டே இருக்கும். பயின்றுக்கொண்டு இருக்கும்பொழுது இடையில் விட்டுவிட்டு வந்துவிடுவீர்கள். அது ஒன்று தான் பிரச்சினை வேறு ஒன்றும் கிடையாது.

குருவை தேடி சென்று பயிலவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக ஒரு குரு அமைவார். அவரை கடைசிவரை தக்கவைத்துக்கொள்வது உங்களின் பொறுமை தானே தவிர வேறு ஒன்றும் கிடையாது.

வேதாரண்யம், கோயம்புத்தூர், திருப்பூர், பவானி போன்ற ஊர்களுக்கு செல்லவேண்டும் என்ற பயண திட்டம் இருக்கின்றது. பொங்கல் முடிந்த பிறகு இந்த ஊர்களில் உள்ள நண்பர்களை சந்திக்கவருகிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: