Followers

Saturday, January 23, 2016

வேண்டுகோள்


வணக்கம்!
          பெரும்பாலான நண்பர்கள் என்னிடம் சோதிடம் பார்த்துவிட்டு சார் நான் ரொம்ப கஷ்டப்படுகிறேன். எனக்கு பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்கின்றது என்று சொல்லுவார்கள். இது எதனால் சொல்லுகின்றார்கள் என்றால் நான் அதிக பணம் கேட்ககூடாது என்பதற்காக இதனை சொல்லுகின்றார்கள்.

என்னைப்பொறுத்தவரை  அனைவரையும் சமமாக தான் பார்ப்பேன். பணம் இல்லை என்பவர்களுக்கும் சரி யாராக இருந்தாலும் அவர்களுக்கு அம்மனின் ஆசி உண்டு என்பதை சொல்லுவது உண்டு. நான் செய்வதும் உண்டும்.

நீங்கள் பரிகாரம் செய்துக்கொடுங்கள் என்று கேட்டால் அதற்கு பணம் வாங்கி தான் ஆகவேண்டிய நிர்பந்தம் எனக்கு இருக்கின்றது. அதற்கு காரணம் தற்பொழுது பார்த்துக்கொண்டு வருகின்ற பாக்கியஸ்தானத்திற்க்கு மற்றும் எனது வழிகாட்டிக்கு எல்லாம் பணம் கொடுக்கவேண்டும் என்ற கட்டாயம் இருக்கின்றது.

அவர்களுக்கு எல்லாம் பணம் கொடுத்துவிட்டு அதற்குரிய பரிகாரத்தை செய்ய ஆரம்பிப்பது உண்டு. இதனை எல்லாம் கொடுக்காமல் நீங்கள் பரிகாரம் செய்துக்கொடுங்கள் என்று உங்களின் கதையை சொல்லிக்கொண்டு வந்தால் என்னால் உங்களிடம் எதுவும் சொல்லமுடியாமல் அப்படியே விட்டுவிடுவேன்.

புதிதாக வரும் நண்பர்கள் இதனை உணர்ந்துக்கொண்டு அதற்கு தகுந்தார் போல் நடந்துக்கொள்ளுங்கள் என்று அன்பாக கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: