Followers

Wednesday, January 6, 2016

தர்மகுணம்


ணக்கம்!
          ஒன்பதாவது வீட்டு அதிபதியும் ஐந்தாவது வீட்டு அதிபதியும் இணையும்பொழுது அவர்களுக்கு நல்ல அறிவு இருக்கும் என்று சொல்லிருந்தேன். நல்ல அறிவோடு ஞான அறிவும் இருக்கும். அனைத்தையும் சிந்தித்து பார்த்து ஞான அறிவை மக்களுக்கு கொடுப்பவர்களாக இருப்பார்கள்.

ஒரு சிலருக்கு தான் இப்படிப்பட்ட அமைப்பு இருக்கும். ஞான மார்க்கம் என்பது பரதேசியாக சென்று ஞானத்தை அடைந்தவர் கிடையாது. இது அனைத்து சுகத்தையும் அடைந்து அதன் வழியாக ஞானத்தை அடைபவர்களாக இருப்பார்கள்.

ஒரு சிலரை நான் பார்த்து இருக்கிறேன். அவர்கள் கொடுத்து கொடுத்தே ஞானத்தை அடைபவர்களாக இருப்பார்கள். ஒன்பதாவது வீட்டு அதிபதியும் ஐந்தாவது வீட்டு அதிபதியும் இணையும்பொழுது நல்ல செல்வவளத்தை கொடுத்துவிடும்.

செல்வவளம் அதிகமாகும்பொழுது பிறர்க்கும் கொடுக்கவேண்டும் என்று நினைக்கும் குணத்தால் தர்மனாக இருப்பார்கள். இப்படிப்பட்ட குணத்தால் ஞானத்தை அடைபவர்களாக இருப்பார்கள்.

ஜாதகத்தில் வந்த ஒரு சில நண்பர்களுக்கு இப்படிப்பட்ட அமைப்பு இருக்கின்றது. அவர்கள் வந்து இந்த நோக்கத்தையே சொல்லியுள்ளார்கள். ஜாதகத்தில் அப்படி இருப்பதால் அவர்கள் கேட்கிறார்கள். நானும் உங்களின் எண்ணம் கண்டிப்பாக நிறைவேறும் என்று வாழ்த்தி அனுப்பி வைத்து இருக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு




No comments: