Followers

Wednesday, January 27, 2016

வெளிநாடு


வணக்கம்!
          பாக்கியஸ்தான அதிபதியும் எட்டாவது வீட்டு அதிபதியும் சம்பந்தப்பட்டு இருக்கும்பொழுது ஒரு சிலர் குடும்பத்தை விட்டு வெளியில் சென்று தங்கிவிடுவார்கள்.

வெளிதேசங்களுக்கு சென்று வாழ்பவர்களாக இருப்பார்கள். தற்பொழுது அனைவரும் குடும்பத்தை விட்டு தான் வெளியில் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றார்கள். இவர்கள் எப்படி என்றால் பல வருடங்கள் வீட்டிற்க்கே திரும்பாத ஒரு நிலையில் வசிப்பவர்களாக இருப்பார்கள்.

எங்கள் பகுதியில் அதிகமாக டிராவல் என்று சொல்லக்கூடிய விசாவில் சிங்கபூர் செல்வார்கள். இவர்கள் அப்படியே அங்கேயே தங்கிவிடுவார்கள். இவர்கள் பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு மேல் அங்கு வசிப்பவர்களாக இருப்பார்கள்.

இவர்களுக்கு எல்லாம் இப்படிப்பட்ட தசா நடந்துக்கொண்டிருக்கும். இவர்களில் ஒரு சிலர் வீட்டில் கூட தொடர்பு இல்லாமல் வாழ்ந்துக்கொண்டும் இருக்கின்றார்கள். வீட்டை விட்டு பிரிந்து எந்த வித தொடர்பும் இல்லாமல் இருப்பதை இப்படிப்பட்ட கிரகசம்பந்தம் செய்கிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: