Followers

Thursday, January 7, 2016

பித்ருதோஷ பரிகாரம்


ணக்கம்!
          பாக்கியஸ்தானம் கெடுகிறது என்றால் முற்பிறவியில் நாம் ஏதோ பெரிய அளவில் தவறு செய்து இருக்கிறோம் என்பதை காட்டுகிறது. இந்த பிறவியில் அதற்கு பரிகாரம் தேடிக்கொள்ள வழி வகுக்கும்.

பித்ரு தோஷம் இருப்பவர்களுக்கு அதிகப்பட்சமாக முற்பிறவியில் கொலை போன்ற பாதங்களில் ஈடுபட்டு இருந்தால் இப்பிறவியில் பித்ருதோஷமாக வருகிறது என்று சொல்லுவார்கள். பித்ருதோஷம் இருப்பவர்களின் நிலையை பார்த்தாலும் அப்படி தான் இருப்பார்கள்.

பித்ருதோஷம் இருப்பவர்களுக்கு ஏற்படும் தடையும் சொல்லி மாளாது. இவர்கள் அனைவரும் செய்யவேண்டியது பரிகாரம் என்பதை விட அவர்களே சென்று இதற்கு பரிகாரம் தேடிக்கொள்ளவேண்டும்.

புண்ணிய ஷேத்திரம் என்று சொல்லப்படுகின்ற இடங்களுக்கு சென்று புனித நீராடிவிட்டு அங்குள்ள இறைவனை தரிசனம் செய்துவிட்டு வந்தாலே போதும் இப்படிப்பட்ட பாதிப்பில் இருந்து விடுப்பட்டு வெளியில் வரலாம்.

குலதெய்வ வழிபாட்டையும் செய்து வரவேண்டும். குலதெய்வ வழிபாட்டிற்க்கு பச்சைப்பரப்புதலை செய்ய சொல்லிருந்தேன். அதனை நீங்கள் செய்து வந்தால் ஒரு நிம்மதியான வாழ்வு உங்களுக்கு கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Mohanraj Muruganandam said...

Dear Sir,

Pls inform about பச்சைப்பரப்புதலை

thanks,

M Mohanraj