Followers

Sunday, January 3, 2016

ஒன்பதில் ராகு


ணக்கம்!
          பாக்கியஸ்தானத்தில் ராகு இருந்தால் என்ன பிரச்சினையை தரும் என்பதை பார்க்கலாம். ராகுவைப்பற்றி நான் ஏற்கனவே சொல்லிருந்தாலும் பல கருத்துக்கள் அதனைப்பற்றி சொல்லவேண்டிய காரணத்தால் இதனை சொல்லுகிறேன்.

ஒன்பதில் ராகு இருக்கும்பொழுது நம்ம சோதிடர்கள் அனைவரும் பித்ரு தோஷம் இருக்கின்றது பித்ரு தோஷம் இருக்கின்றது இதற்கு பரிகாரம் செய்யவேண்டும் தற்பொழுது அம்மா அப்பா இருப்பதால் பரிகாரம் செய்யமுடியாது. அம்மா அப்பா யாராவது ஒருவர் இறந்த பிறகு இதற்கு பரிகாரம் செய்யலாம் என்று சொல்லிவிடுவார்கள்.  இது நடக்கும் காரியமா என்ன? 

அம்மா அப்பா இறந்தால் தர்பணம் செய்யலாம். பித்ரு தோஷத்திற்க்கு உள்ள பரிகாரத்திற்க்கு தேவையில்லை. அறுபது வயது வரை பித்ரு தோஷத்திற்க்கு பரிகாரம் செய்யாமல் அப்படியே உட்கார்ந்த இருக்கமுடியும். பித்ரு தோஷம் இருந்தாலும் நன்றாக வாழும் மக்களும் இருக்கிறார்கள்.

ராகு கிரகம் எந்த விசயத்தில் நமக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்றால் அதிகப்படியான காம உணர்வை தந்துவிடும். இதனால் நம்ம ஆளுங்க படும் பாடு இருக்கின்றதே அது தான் பிரச்சினை. இது திருமணத்திற்க்கு முன்பு என்றால் கூட அந்தளவுக்கு வாழ்க்கையில் பிரச்சினை வந்துவிடாது. 

திருமணத்திற்க்கு பிறகு கூட இந்த ராகு வேலையை காட்ட ஆரம்பித்தால் தான் அவர்களின் குடும்பம் சிக்கலை சந்திக்கும். ராகு ஜாதகத்தில் ஒன்பதில் இருந்தால் தான் இந்த பிரச்சினை என்பது கிடையாது. ராகு பலம்பெற்று அல்லது ராகு தசா நடந்தாலும் இதே பிரச்சினையை சந்திப்பார்கள்.

திருமணத்திற்க்கு பிறகு ஒரு வீட்டில் ராகுவின் பலம் அதிகரித்தால் அந்த வீட்டில் இருக்கும் ஆண் அல்லது பெண் பிறரை நாடி சென்றுவிடுவார்கள். திருமணத்திற்க்கு பிறகு என்றால் எப்படி இருக்கும் குடும்பம் அவ்வளவு தான். 

நான் பல பேரின் ஜாதகத்தில் இந்த அனுபவத்தை கண்டுள்ளேன். இதற்கு நான் பரிகாரம் செய்ய சொன்னாலும் கூட அவர்கள் ஒழுங்காக செய்யமுடியாமல் போய் அவர்கள் மேலும் மேலும் சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்கள்.

இப்படிப்பட்ட சிக்கல் உங்களின் குடும்பத்தில் இருந்தால் நீங்கள் ராகுவிற்க்கு பரிகாரம் செய்வதோடு அம்மனை விடாமல் பிடித்துக்கொண்டு அம்மனுக்கு என்று செய்து வாருங்கள். இதில் பல பரிகாரம் இருக்கின்றது அவர் அவர்களின் ஜாதகத்திற்க்கு தகுந்தவாறு இதனை செய்யவேண்டும்.

இதற்கு பரிகாரம் செய்யவேண்டும் இதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றாலும் கூட அவர் அவர்களுக்கு பாக்கியம் வேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: