Followers

Saturday, October 21, 2017

நோய் தீர்க்கும் மந்திரம்

ணக்கம்!
          மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம் இதனைப்பற்றி பழைய பதிவுகளில் சொல்லிருக்கிறேன். கடந்த காலத்தில் எல்லாம் யாராவது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்ந்து இருந்தால் அவர்கள் என்னிடம் போன் செய்து அவர்களுக்காக அம்மனிடம் வேண்டுங்கள் என்று சொல்லுவார்கள். நானும் அவர்களுக்காக பிராத்தனை வைப்பேன். 

இதில் நிறைய வெற்றியை பெற்று இருக்கிறேன் ஆனால் இதனை நிறுத்தியதற்க்கு காரணம் நண்பர்களின் செயல்பாடு சரியில்லை என்பதால் இதனை நிறுத்திவிட்டேன். இதனை நிறுத்தினாலும் பலர் பலமுறை என்னை தொடர்புக்கொண்டே இருப்பார்கள். நீங்களே இறைவனிடம் பிராத்தனை வைத்துக்கொள்ளலாம்.

ஒருவர் நோய்வாய்படுகின்றார் என்றால் அது மிகவும் கஷ்டமான ஒரு விசயம். கர்மவினைப்படி அல்லது ஏதாவது பிரச்சினைப்படி நோய் வந்தாலும் அவர்களின் கஷ்டம் வெளியில் சொல்லமுடியாதபடி இருக்கும். 

ஒருவர் நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டுக்கொண்டு இருக்கின்றார் என்றால் அவரின் பக்கத்தில் ஒரு செல்போன் வைத்து அதில் ம்ருத்யுஞ்ஜய மந்திர ஒலியை ஒடவிட்டால் இறைவனின் கருணையால் அவர்கள் மீண்டும் நன்றாக வருவார்கள்.

மந்திரத்தைப்பற்றி நாம் சொல்லதேவையில்லை. அது உங்களுக்கே அதன் விளக்கம் எல்லாம் தெரியும். இதனை செய்யவேண்டியது மட்டும் தான் உங்களின் கடமை. ஆறாவது வீட்டின் தசா நடந்தாலும் உங்களுக்கு நோய் வரும். அப்பொழுது தினசரி பூஜையில் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

எதனையும் தொடர்ச்சியாக செய்தால் மட்டுமே உங்களுக்கு நல்லது நடக்கும். அதனால் நீங்கள் தொடர்ச்சியாக இதனை செய்யுங்கள் என்பதை மட்டும் சொல்லுவேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Kalairajan said...

அய்யா
வணக்கம் இந்த மந்திர ஒலி நாடாவை வீட்டில் சாதரணமாக பூஜை செய்யும் போது ஒலிக்கவிடலாமா?