Followers

Friday, October 13, 2017

கேள்வி & பதில்


வணக்கம்!
         நேற்று ஒரு நண்பரை சந்திக்க கும்பகோணம் சென்றுருந்தேன். அவர் கேட்ட கேள்வி நோய் என்பது கர்மாவின் வழியில் தான் வருகின்றதா என்று கேட்டார். 

ஒருவருக்கு நோய் வருவது என்பது உங்களின் கர்மாவின் முழுபலனினால் தான் வரும். இதனை தவிர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பதால் தான் பெரும்பாலும் நோய்களுக்கு பரிகாரம் அவர் அவர்களே சென்று புண்ணியத்தை தேடி செய்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுவது உண்டு.

ஒருவருக்கு நோயை போக்க நாம் பரிகாரம் செய்தால் அதற்கு செலவும் அதிகமாக இருக்கும் அதனை வாடிக்கையாளர்களிடம் வாங்கமுடியாது என்பதால் இதனை தவிர்ப்பது உண்டு.

ஒரு சில நாேய்கள் மிகவும் உக்கிரமாக தாக்க ஆரம்பிக்கும். இது தான் பெரிய கஷ்டமாக இருக்கும். நீண்ட நாள்கள் உள்ள நோய்கள் எல்லாம் இப்படிப்பட்ட வகையில் வருவது. அதனை அவர்களின் பெற்றோர்கள் சென்று புண்ணியம் தேடி தான் இதனை சரிசெய்யமுடியும்.

நோய்க்கு மருத்துவமும் பார்க்கவேண்டும் பரிகாரமும் செய்யவேண்டும். அப்பொழுது தான் அது முழுமையாக ஒருவரை விட்டு விலகி செல்லும். அப்படி இல்லை என்றால் அது வேறு விதமாக வெளிப்படுத்தும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: