Followers

Tuesday, October 3, 2017

சுக்கிரன்


வணக்கம்!
          இந்த உலகத்தில் பிறந்த எவரும் இந்த உலகத்தில் உள்ளதை நல்ல என்ஜாய் செய்யவேண்டும் என்று நினைப்பார்கள். சுகபோகமாக வாழவேண்டும் என்று நினைக்காதவர்கள் யாராவது உண்டா. அனைவரும் ஆசைப்படுவார்கள்.

உங்களின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஒரு சோதிடரிடம் சென்று சுக்கிரன் எனக்கு நன்றாக இருக்கின்றதா என்று கேளுங்கள். கண்டிப்பாக அவர் சுக்கிரன் நல்லதாக இருக்கின்றது என்பார். எப்படியும் பாசிடிவ்வான ஒரு பதிலை நாம் எதிர்பார்க்கலாம்.

நன்றாக இருக்கின்றது என்று பார்த்தால் நாம் நல்ல ஆடம்பரமாக வாழவேண்டும் நமக்கு எந்தவித தொந்தரவும் இருக்ககூடாது. ஏன் என்றால் சுக்கிரன் நன்றாக இருக்கின்றது என்றாலே நாம் சொன்ன விசயத்தில் குறை சுக்கிரன் வைக்காது.

நடப்பது வேறு கதையாக இருக்கின்றது. இந்த உலகத்தில் 80 கோடி பேர் பசியால் வாடுகின்றனர் என்று ஒரு கருத்தை சமீபத்தில் செய்தியாக பார்த்தேன். இன்னமும் நன்றாக சர்வே செய்தால் இது அதிகம் பேர் என்பது தெரியும். சுக்கிரன் நன்றாக இருந்தால் பசி பட்டினிக்கு வாய்ப்பு இருக்காது என்பது தான் கருத்து. உலகத்தில் அப்படி இருக்கின்றது.

ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் சுக்கிரன் அந்தளவுக்கு நன்றாக இல்லை என்று சொல்லலாம். ஏன் என்றால் சுக்கிரன் மிகச்சரியாக வேலை செய்தால் வறுமை என்பதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்பது தான் உண்மை. அனைத்தையும் கொடுத்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: