Followers

Thursday, October 19, 2017

சுக்கிரன் பரிகாரம்


ணக்கம்!
          சுக்கிரன் என்றாலே அது அழகு தான். ஒவ்வொரு கடவுளையும் நாம் இராஜ அலங்காரத்தில் தரிசிப்பது சுக்கிரனின் காரத்துவத்தை நாம் பெறுவதற்க்கு வழி. எப்படிப்பட்ட அலங்காரம் இருந்தாலும் இராஜ அலங்காரம் என்பது பெரிய தரிசனமாகவே இருக்கும். மக்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் ஒரு தரிசனம் சுக்கிரனின் காரத்துவத்தை கொடுக்கிறது.

சுக்கிரனின் காரத்துவத்தை கொடுப்பது கையில் மருதாணி இட்டுக்கொள்ளும் பழக்கம். சுக்கிரனின் காரத்துவம் பெரியளவில் கொடுப்பது இந்த பழக்கம். தன்னை அழகுப்படுத்துவதில் மட்டும் இல்லாமல் மருதாணி உடலில் குளிர்ச்சியையும் கொடுத்துவிடும்.

மருதாணி என்றாலே அது பெண்கள் மட்டும் தான் வைத்துக்கொள்ளும் என்று ஒரு பழக்கம் இருக்கின்றது. சுக்கிரனின் காரத்துவத்தை பெறவேண்டும் என்றால் அது ஆண்களாக இருந்தால் கூட வைத்துக்கொள்ளலாம்.

மருதாணியை ஆண்கள் வைத்துக்கொண்டால் வெளியில் உள்ளவர்கள் கிண்டல் செய்வார்கள் என்று நினைத்து வைக்காமல் இருந்தால் உள்ளங்கையில் மட்டுமாவது வைத்துக்கொள்ளலாம். நாம் வாழுவதற்க்கு பிறர் கிண்டல் செய்வார்கள் என்று நினைக்கவேண்டியதில்லை.

மருதாணியை நான் எனது கையில் வைத்திருக்கிறேன். எனக்கு சுக்கிரனின் ஆற்றல் தேவைப்படும் நேரத்தில் எல்லாம் இப்படி செய்வது உண்டு. அடுத்தவர்கள் கிண்டல் செய்வார்கள் என்று எல்லாம் நான் நினைப்பதில்லை. நமக்கு தேவையானதை நான் செய்துக்கொள்வது உண்டு.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

KJ said...

Yea sir.. antha Naalu perukaga nama Vaazha kudathu... namakaga Vaazha vendum... apdi irunthavargal than Vetri Perugirargal.. thank you.