Followers

Friday, October 27, 2017

கஞ்சனூர் சுக்கிரன்

ணக்கம்!
          நவக்கிரக ஸ்தலங்கள் என்று சொல்லக்கூடிய ஸ்தலங்களுக்கு சென்று வந்து இருக்கிறேன். இதில் பல கோவில்கள் ஒரு செட்டிங் போல தான் எனக்கு தோன்றுகிறது. அந்த வகையில் கஞ்சனூர் சுக்கிரன் வழிபாட்டு தலம் என்பதும் செட்டிங் போல தான் எனக்கு தோன்றியது.

இதனை எல்லாம் வெளியில் யாரும் சொல்லமாட்டார்கள். அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதால் இதனை சொல்லமாட்டார்கள். நான் சொல்லுகிறேன். அந்த கோவில் அதற்குரிய கோவிலாக எனக்கு தெரியவில்லை.

கஞ்சனூருக்கும் சுக்கிரனுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கலாம். அதனால் வேண்டுமானால் அந்த கோவிலுக்கு சென்று வரலாம். அதனை நான் ஒரு முறை தான் சென்று வந்து இருக்கிறேன். நமது நண்பர்கள் எல்லாம் கேட்கும்பொழுது ஒரு முறை சென்று வாருங்கள் என்று சொல்லிருக்கிறேன்.

சுக்கிரனுக்கு நிறைய கோவில்கள் சொல்லுகின்றனர். அதனையும் நான் பார்த்து இருக்கிறேன். எனக்கு அந்தளவுக்கு பிடிபடவில்லை என்று தான் சொல்லவேண்டும். ஒரு வேளை எனக்கு தெரியவில்லையா என்றும் தெரியவில்லை.

என்ன இப்படி சொல்லுகின்றீர்கள் என்றால் ஒரு முறை மட்டும் இந்த காேவிலுக்கு சென்று வரலாம். மற்றபடி அந்த காரத்துவத்தில் உள்ள விசயங்களை மட்டும் செய்தால் போதும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Kalairajan said...

அய்யா
ஸ்ரீரங்கமும் சுக்கிர ஸ்தலம் என்கிறார்களே?