Followers

Thursday, October 26, 2017

ஆசி


வணக்கம்!
          தென் இந்தியாவை விட வடஇந்தியாவில் சாபம் போன்றவை கொஞ்சம் குறைவதற்க்கு அவர்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கின்றது. அதனை அவர்கள் செய்து அந்த சாபத்தை போக்கிக்கொண்டு குரு மற்றும் சுக்கிரனின் அருளை பெற்றுவிடுகின்றனர்.

வடஇந்தியர்கள் பெரும்பாலும் தன்னை விட வயதானவர்களிடம் மற்றும் ஆன்மீகவாதிகளிடமும் காலில் விழுந்து ஆசிவாங்கிவிடுகின்றனர். இது அவர்களுக்கு ஒரு நல்ல ஆசியை கொடுக்கும்.

நம்ம ஆளுங்க அரசியல்வாதிகளிடம் காலில் விழுந்து ஆசி வாங்கின்றனர் இது புண்ணியம் கிடைக்காது. பெரும்பாலும் வடஇந்தியர்கள் அவர்களின் பெற்றோர்களின் காலில் விழுந்து நன்றாக ஆசிவாங்கிவிடுகின்றனர் நம்ம ஆளுங்க இதனை செய்வதில்லை.

நான் வயதானவர்களிடம் காலில் விழுந்து ஆசி வாங்கியிருக்கிறேன்.  நம்ம ஜாதககதம்பத்தில் இருந்து வரும் பெரியவர்களிடம் கூட வாங்கியிருக்கிறேன். ஒரு சில காலக்கட்டத்திற்க்கு பிறகு தான் இதனை செய்வதில்லை. ஆன்மீகவாதிகளிடம் மட்டும் ஆசி வாங்கவேண்டும் ஒரு விதி எங்களுக்கு இருப்பதால் இதனை செய்வதில்லை.

உங்களின் நிலையில் இருக்கும்பொழுது தாராளமாக ஆசி வாங்கலாம். இந்த ஆசி உங்களுக்கு பல நல்ல விசயங்களை மறைமுகமாக செய்யும். எப்படி செய்யும் என்பதைவிட நீங்கள் செய்து பாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: