Followers

Tuesday, October 17, 2017

பரிகாரம்


வணக்கம்!
         பரிகாரம் இரண்டு நாட்கள் சென்ற பிறகு செய்யப்படும். தீபாவளி பண்டிகை சென்ற பிறகு செய்துவிடுகிறேன். பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்பியவர்களுக்கு தான் இந்த பதிவு. அனைவருக்கும் இது பொருந்தும்.

உலகமகா கர்மத்தை எல்லாம் ஒருவன் வாங்கி வைத்திருக்கிறீர்கள் என்றால் அது உங்களை தான் சொல்லமுடியும். அதனை நான் உணர்ந்து இதனை எழுதுகிறேன். இவ்வளவு கர்மத்தை வைத்துக்கொண்டு ஒருவன் முன்னேற்றம் அடையலாம் என்றால் அது கண்டிப்பாக சாத்தியப்படக்கூடியது கிடையாது என்றே சொல்லலாம்.

முதலில் உங்களை சரி செய்துக்கொள்ளவேண்டும் அதன் பிறகு நீங்கள் முன்னேற்றத்தைப்பற்றி யோசித்தால் நன்றாக இருக்கும். உலகத்தில் உள்ள அனைத்து புண்ணிய நதிகளிலும் முடிந்தால் நீராடிவிட்டு வாருங்கள். கடன் வாங்கியாவது இதனை முதலில் செய்துவிடுங்கள்.

சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய் வைத்து நன்றாக குளியுங்கள். உடலும் ஆத்மாவிலும் நிறைய பாவங்களை இது போக்கும் என்பது சூட்சம தந்திரம் இது. இதனை தொடர்ந்து செய்துக்கொண்டு வாருங்கள்.

முடிந்தளவுக்கு எங்கு எல்லாம் வயது முதிர்ந்தவர்கள் பெற்றோர்களால் தவிக்கவிட்டவர் மூத்தவர்கள் அனைவருக்கும் உங்களால் முடிந்த உதவிகளை காணும்பொழுது செய்துக்கொண்டே வாருங்கள்.

ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று வாருங்கள். சிவன் கோவிலுக்கு சென்று கொடி மரத்துக்கு முன்பு முற்பிறவியிலும் இப்பிறவியிலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவத்தை போக்கி விமோசனத்தை எனக்கு அளிக்கவேண்டும் என்று வேண்டி வாருங்கள்.

வயது முதியவர்களாக இருந்தால் அவர்களின் கால்களில் விழுந்து ஆசி வாங்குங்கள். அவர்கள் ஆன்மீகவாதிகளாக இருந்தால் நல்லது. இது உங்களின் ஆத்மாவிற்க்கு நல்ல விமோசனத்தை அளிக்ககூடியது.

என்னிடம் பரிகாரம் செய்வதில் மட்டும் கர்மா அனைத்தும் தொலைந்துவிடாது. நீங்களே இதனை எல்லாம் செய்தால் உங்களின் கர்மா அனைத்தும் தொலைந்து ஒரு சூப்பரான வாழ்க்கை அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: