Followers

Thursday, October 19, 2017

சுக்கிரன்


வணக்கம்!
          வெள்ளம் வருவதற்க்கு முன்பே அணை போடுவது தானே சிறப்பு. வெள்ளம் வந்தபிறகு அணை போடுவது சரியாக இருக்காது. அதற்க்குள் சிக்கி நாம் சீரழிந்து விடுவோம். ஏழில் நிற்க்கும் சுக்கிரனும் ஒருவருக்கு திருமண வாழ்வில் நிறைய சிக்கல்களை உருவாக்கிவிடுவார்.

ஏழில் சுக்கிரன் தனித்து நிற்க்கும்பொழுது அவருக்கு திருமண வாழ்க்கை சரியாக இருக்காது என்பது என்னுடைய அனுபவத்தில் நான் நிறைய பார்த்த ஜாதகத்தின் வழியாக தெரிந்துக்கொண்டது. இருவரும் நாங்கள் வாழவிரும்பவில்லை என்று சொல்லுவார்கள்.

பெண்களின் ஜாதகத்தில் ஏழில் சுக்கிரன் இருந்தால் அவர்கள் திருமணம் செய்தால் திருமணம் நடந்த நாளிலில் இருந்தே கணவன் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதிகமான பிரச்சினையை கொடுப்பார். உன்னை எனக்கு பிடிக்கவில்லை நீ வேறு திருமணம் செய்துக்கொள் என்பார்.

ஏழில் சுக்கிரன் தனித்து நின்றால் தான் பிரச்சினை. சுக்கிரன் மற்ற ஒரு கிரகத்தோடு சேர்ந்து இருந்தால் அது பிரச்சினையை கொடுக்காது. வாழ்க்கை பிரச்சினை இல்லாமல் செல்லும். அதே சுக்கிரன் குருவோடு ஏழில் சேர்ந்து இருந்தால் அவர்கள் சண்டை போட்டுக்கொள்வார்கள் ஆனால் பிரியமாட்டார்கள்.

சுக்கிரன் ஏழில் தனித்து நின்று அது ஆட்சியோ உச்சமோ பெற்றால் அந்தளவுக்கு பிரச்சினை கொடுப்பதில்லை. இதனை பார்த்து பயம்கொள்ளதேவையில்லை. சாதாரணமாக வாழ்க்கை செல்லும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Kalairajan said...

அய்யா
இதற்கான பரிகாரம் உண்டா?