Followers

Sunday, October 8, 2017

கேள்வி & பதில்


வணக்கம்!
         சுக்கிரனைப்பற்றி நண்பர் ஒருவர் கேள்வி அனுப்பியிருந்தார். அதாவது சுக்கிரனுக்கு பரிகாரமாக பெண்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று சொல்லிருந்தீர்கள். பெண்களாக இருந்து அவர்களுக்கு சுக்கிரன் பிரச்சினை கொடுத்தால் அவர்கள் யாருக்கு செய்வது என்று கேட்டார்கள். பரிகாரம் செய்யும்பொழுது இருபாலருக்கும் தனித்தனியாக பரிகாரம் சொல்லுங்கள் என்று சொல்லிருந்தார்.

இருபாலருக்கும் இனிமேல் தனிக்கவனம் எடுத்துக்கொண்டு சொல்லுகிறேன். பொதுவாக ஆண்கள் பெண்கள் என்று பிரித்து பார்க்காமல் இதனை செய்யலாம்.

பெண்கள் பெண்களுக்கே உதவிசெய்யலாம். உங்களின் நண்பரை அழைத்துக்கொண்டு கடைக்கு செல்லுங்கள். நீங்கள் ஒரு புடவை எடுப்பது போல் எடுத்துக்கொண்டு உங்களின் நண்பர்களுக்கும் ஒரு புடவை எடுத்துக்கொடுத்துவிடுங்கள். இதுவும் சுக்கிரனுக்கு உகந்ததாக இருக்கும்.

பெண்கள் பெண்களுக்கு எடுத்துக்கொடுத்தாலும் அவர்களின் சக்தி உங்களுக்கு கிடைக்கும். இதில் எந்தவித பாகுபாடும் இல்லை. சுக்கிரன் என்றால் நீங்கள் பெண்களுக்கு எடுத்துக்கொடுக்கலாம். பொதுவாக துணிகள் அனைத்தும் சுக்கிரனின் காரத்துவத்தில் வருவதால் அதனை யாருக்கும் எடுத்துக்கொடுக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

radha said...

thangalin melaana pathivukku mikka nanri ayya! thelivana pathilai kodutheerkaL!!