Followers

Saturday, October 28, 2017

கேள்வி & பதில்


வணக்கம்!
          ஸ்ரீரங்கமும் சுக்கிர ஸ்தலம் என்கிறார்களே?

பெருமாள் கோவிலில் நவக்கிரகங்களே இருக்காது. இதில் இந்த கோவில் மட்டும் சுக்கிரஸ்தலம் என்பது ஏற்கமுடியாத ஒன்று தான். பொதுவாக கூட்டம் வராத கோவிலில் கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்பார்கள்.

நெல்லை பகுதியில் கூட ஒரு சில பெருமாள் கோவிலுக்கு சென்று இருக்கிறேன். அதில் ஒவ்வொரு காேவிலுக்கும் ஒவ்வொரு கிரகத்தை கொடுத்து வைத்திருக்கிறார்கள்.

கிரகங்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் என்பது சிவனுக்கு தான் கொடுத்து வைத்திருக்கிறார்கள். பெருமாளுக்கு இதனை கொடுக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். நம்ம ஆளுங்க கூட்டம் கூடாத இடங்களுக்கு கிரகங்களை வைத்து கூட்டத்தை இழுக்க செய்கின்றனர்.

ஸ்ரீரங்கத்திற்க்கு கூட்டம் வந்தாலும் இதனை ஏன் அங்கு வைத்திருக்கின்றனர் என்று தெரியவில்லை. கண்டிப்பாக இது தேவையில்லாத ஒரு வேலை என்றே சொல்லலாம். சுக்கிரனுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்றே தோன்றுகிறது.

நகைகள் அதிகமாக சாமிக்கு போடும் இடமாக இருந்தால் ஒரளவு சுக்கிரன் கிரகம் வேலை செய்யும் என்பதால் ஒரு சில பெருமாள் கோவிலை தேர்ந்தெடுத்து இருக்கலாம் என்பது என்னுடைய கருத்து.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: