Followers

Friday, October 20, 2017

வெள்ளிக்கிழமையும் சுக்கிரனும்


வணக்கம்!
          நமது நாடு முன்னேற்றம் அடைய வேண்டும் நாம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் நாம் லீவு விடவேண்டிய நாள் வெள்ளிக்கிழமை. இதனை யார் கேட்பார்கள் யாரும் கேட்கமாட்டார்கள்.

அரசாங்கத்தை விட்டுவிடலாம் நாம் என்ன செய்யலாம் என்றால் வெள்ளிக்கிழமை அன்று நாம் ஒய்வு எடுக்கலாம். நாம் வேலைக்கு சென்றாகவே வேண்டுமே என்று கேட்கலாம். வேலைக்கு சென்றால் கூட பெரியளவில் அலுத்துக்கொள்ளாமல் சும்மா இருக்கலாம். 

வெள்ளிக்கிழமை நகைகளை அணிந்துக்கொள்ளலாம். வெள்ளிக்கிழமை அன்று வெள்ளை வேஷ்டி அணிந்துக்கொள்ளலாம். நறுமணம் கமழும் வாசனை திரவியங்களை பயன்படுத்தலாம். பெண்களாக இருந்தால் நிறைய பூக்களை வாங்கி வைத்துக்கொள்ளலாம். வெள்ளிக்கிழமை துணிக்கடைகள் மால்கள் மற்றும் அம்மன் கோவில் சென்றால் போதும்.

தொழில் செய்பவர்கள் வெள்ளிக்கிழமை அன்று ஒய்வு எடுத்துக்கொள்ளலாம். வெள்ளிக்கிழமை பெரியளவில் ஒன்றும் வியாபாரம் நடந்துவிடாது. வியாபாரத்தில் தொழிலாளிகளை வைத்துவிட்டு நீங்கள் ஒய்வு எடுத்துக்கொள்ளலாம்.

வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் நல்ல உயர்ந்த உணவுவிடுதிகள் சென்று உணவருந்திவிட்டு வரலாம். வீட்டில் கூட நல்ல உணவுகளை சமைத்தும் சாப்பிடலாம். இது எல்லாம் சுக்கிரனுக்கு நீங்களே செய்யக்கூடிய பரிகாரங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: