Followers

Saturday, October 28, 2017

சாபம் விடும் சோதிடர்கள்


வணக்கம்!
          அடிக்கடி நமது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஊரில் உள்ள அனைத்து சோதிடர்களிடமும் காண்பித்துக்கொண்டே இருக்ககூடாது. ஏன் இதனை சொல்லுகிறேன் என்றால் பல சோதிடர்கள் அவர்களின் வாயில் இருந்து நல்லதை சொல்லுவதே இல்லை. முடிந்தவரை எதிர்மறையாகவே சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

சோதிடர்கள் தன்னுடைய வாக்கு பலிதம் ஆகவேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பார்கள். இவர்கள் எதிர்மறையாக சொல்லி அது உங்களுக்கு நடக்க ஆரம்பித்துவிடும் என்பதால் அதனை தவிர்க்க வேண்டுகிறேன்.

என்னிடம் சோதிடம் பார்க்கும் நண்பர்களுக்கு கூட மிக பெரிய கஷ்டம் வருவதை அறிந்தால் கூட அவர்களுக்கு தகுந்த மாதிரி மாற்றி சொல்லி அவர்களுக்கு புரியும்படியும் அது நடக்ககூடாதபடியும் சொல்லிவிடுவது உண்டு. இதனை அனைவரும் சொல்லுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது.

என்னிடம் மட்டுமே சோதிடம் பார்க்கவேண்டும் என்பதற்க்காக இதனை சொல்லவில்லை. உண்மையான ஒரு கருத்து இது தான். சோதிடர்கள் முடிந்தவரை உங்களிடம் எதிர்மறையாக சொல்லி அது நடக்க ஆரம்பித்துவிட்டால் அப்பொழுது சிக்கலில் மாட்டுவது நீங்களாவே இருக்கும்.

சாபத்தை சோதிடர்களும் செய்துக்கொண்டு இருக்கின்றார்கள். சோதிடர்களின் வாயில் சாபம் வாங்க கூடாது என்பதால் இதனை தவிர்த்துவிடுங்கள் என்று சொல்லுகிறேன். முடிந்தவரை ஆன்மீகத்தில் இருப்பவர்களிடமும் சோதிடர்களிடமும் சாபத்தை வாங்கிக்கொள்ளகூடாது. புரிந்து நடந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: