Followers

Tuesday, October 17, 2017

கேள்வி & பதில்


வணக்கம்!

KJ said...
Sir, Vaazhkayil munneriya palarum , Aaramba kaalathil yethavathu oru Velai seithirupar. Grahathin matrathaal, Veru Thuraiku Maruvar. Athan Piragu avar Periya Alavil vanthu vidukirargal. Example, "Rajnikanth, Conductor to Super Star", "OPS Tea Shop - CM", "MGR Actor - CM", Ithai patri thangal Karuthu?

தங்களின் கருத்துக்கு நன்றி. ஒரு மூன்று பேரை மட்டும் பார்த்து நாம் ஏமாந்து போய்விடுகிறோம். பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் மூன்று கோடி பேர்கள் இருப்பார்கள். அவர்களை நாம் கருத்தில் எடுத்துக்கொள்வதில்லை. 

ஒரு துறையில் நாம் பணியாற்றி நாம் அந்த துறையில் எதுவும் சம்பாதிக்கவில்லை வேறு எதுவும் பெறவில்லை என்றால் அதனை நாம் மாற்றிவிடலாம் ஆனால் ஒரு துறையில் வெற்றி பெற்று அதில்  சம்பாதித்துவிட்டு அதனை விட்டுவிட்டு சென்றுவிடகூடாது என்பதை தான் சொல்லுகிறேன்.

எனக்கு தெரிந்த பலர் ஒரு துறையில் நல்ல சம்பாதித்துவிட்டு அது போராடிக்கு என்று அந்த துறையை விட்டு செல்பவர்களும் இருக்கின்றனர். அது தவறு என்று சொல்லுகிறேன்.

ஒரே துறையில் நீங்கள் மேலே செல்லவேண்டும் என்றால் அந்த துறையில் நீங்கள் மாற்றத்தை செய்துக்கொள்ளலாம். துறைமாறாமல் உங்களின் பதவி மற்றும் வேலையை தான் மாற்றிக்கொள்கிறீர்கள். தவறு இல்லை செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: