Followers

Tuesday, October 24, 2017

கேள்வி & பதில்


ணக்கம்!
         
இந்த மந்திர ஒலி நாடாவை வீட்டில் சாதரணமாக பூஜை செய்யும் போது ஒலிக்கவிடலாமா?

தினமும் பூஜையறையில் இதனை ஒலிக்கவிடலாம். மந்திரங்கள் ஒலிகள் உள்ள பாடல்கள் அனைத்தும் வீட்டில் ஒலிக்கவிடலாம். எந்த தவறும் கிடையாது. மந்திரங்கள் ஒலிக்கவிட்டு அந்த நேரத்தில் அதனை அமைதியாக உள்வாங்கிக்கொண்டு இருக்கவேண்டும்.

மந்திரங்கள் சொல்லும்பொழுது அமைதியாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு நல்லது நடக்கும். வீட்டில் மந்திரங்களை ஒலிக்கவிட்டுவிட்டு வேறு வேலைகள் பார்த்துக்கொண்டு இருக்ககூடாது. 

மந்திரங்கள் ஒலிக்கும்பொழுது நமது வீட்டில் சண்டை சச்சரவு எதுவும் இருக்ககூடாது. எது வீட்டில் நிலவுகிறதோ அது மறுமுறை உங்களை தேடி வரும்.


நமது நண்பர்கள் என் மீது உள்ள அன்பில் அவர்களின் வீட்டில் நடக்கும் விஷேசங்களுக்கு பத்திரிக்கை அழைப்பிதழை அனுப்புவார்கள். அதனை நான் பூஜையறையில் வைத்து பூஜை செய்யும்பொழுது வேண்டிக்கொள்வேன்.

பல நண்பர்கள் வரமாட்டீர்கள் என்று கேட்பார்கள். ஒரு சில காலக்கட்டத்தில் சென்று வந்து இருக்கிறேன். தற்பொழுது வேலை சுமை அதிகமாக இருக்கின்றது. அதனை மட்டும் தான் பார்க்கமுடிகிறது. நான் வரவில்லை என்று கோபம் கொள்ளவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

ஆறாவது வீட்டிற்க்கு பரிகாரம் முழுவதும் முடியும் நிலையில் இருக்கின்றது. இதுவரை ஜாதகத்தை அனுப்பியவர்களுக்கு பரிகாரம் சம்பந்தமாக தகவலும் வரவில்லை என்றால் உடனே என்னை தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: