Followers

Saturday, October 7, 2017

சுக்கிரன்


வணக்கம்!
          சொந்த வேலை காரணமாக இரண்டு நாட்கள் நண்பர்களை தொடர்புக்கொள்ளமுடியவில்லை. இன்று முதல் பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்பியவர்களுக்கு ஒவ்வொருவரையும் தொடர்புக்கொண்டு பேசுகிறேன். பரிகார பூஜை செய்வது அம்மன் பூஜைக்கு பிறகு செய்யப்படும். பரிகாரம் செய்யும்பொழுது உங்களை தொடர்புக்கொண்டு சொல்லுவேன்.

சுக்கிரனினைப்பற்றி பார்த்து வருகிறோம். சுக்கிரனின் பலம்  குறையும்பொழுது உங்களுக்கு திருமணம் நடைபெறுவது கடினமாக இருக்கும். திருமணம் நடைபெற்றாலும் திருமணத்திற்க்குரிய வாழ்க்கை உங்களுக்கு அமைவது சந்தேகமே.

சுக்கிரனின் உங்களுக்கு இந்த மாதிரியான பிரச்சினையை கொடுக்கிறார் என்றால் அதிகப்பட்சம் அம்மன் கோவிலுக்கு அடிக்கடி சென்று வரவேண்டும். ஒரு அம்மன் கோவிலில் காலந்தோறும் பூஜை நடைபெற வழி செய்யவேண்டும். 

பெரும்பாலும் பெண்களுக்கு தீங்கு விளைக்க கூடாது. மனரீதியாக கூட அவர்களுக்கு தீங்கு செய்யாமல் இருக்கவேண்டும். பெண்களுக்கு உதவி செய்தாலே போதும் சுக்கிரனின் பலம் உங்களுக்கு கிடைக்க ஆரம்பிக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

radha said...

penkala irunthaalum sukkira palam pera penakalukkE help seyya vendumaa? entha pathivu pottalum irandu balarkkum(Men, Women) pothuvaga sonnal nanraga irukkum. nanri vanakkam