Followers

Friday, November 24, 2017

சுக்கிரன்


வணக்கம்!
          சுக்கிரன் சனி ராகு இவர்கள் எல்லாம் ஒரே கோஷ்டியை சேர்ந்தவர்கள். இவர்களின் காரத்துவம் எல்லாம் ஒரே மாதிரியாக தான் இருக்கும் ஒவ்வொருவரும் தனி கிரகங்களாக இருந்தாலும் ஒரே மாதிரியாக காரத்துவத்தை பெற்றவர்களாகவே இருப்பார்கள்.

எப்பொழுதும் ரவுடி போல இருப்பவர்கள். தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று நினைப்பவர்களாக இருக்க மாட்டார்கள். ஊரில் உள்ள வம்பை எல்லாம் இழுத்துபோட்டு ஏதாவது ஒரு ரணகளத்தில் தான் இருப்பார்கள்.

சுக்கிரனும் அப்படிப்பட்ட ஒன்று தான். ஊரில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள ஐயரை பாருங்கள். எப்பொழுதும் சாந்தமாக இருந்துக்கொண்டு அவர்கள் வேலையை மட்டும் செய்வார்கள். ஏதாவது ஒரு அம்மன் கோவிலில் உள்ள பூசாரியை பாருங்கள். ஏதாவது ஒரு அக்கபோரை செய்துக்கொண்டு இருப்பார்கள்.

அம்மன்கோவில் பூசாரி எல்லாம் பார்த்தால் திமிராக திரிவார்கள். தான் ராஜா என்ற நினைப்போடு இருப்பார்கள். சுக்கிரனோடு காரத்துவம் அவர்களை அப்படி செயல்பட வைக்கிறது. இவர்கள் நேரத்திற்க்கு கோவிலுக்கு வந்து பூஜை கூட செய்யமாட்டார்கள்.

சுக்கிரனின் அருளை பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அப்படியே அதனை பெற்றாலும் அதனை கடைசி வரை கொண்டு செல்வது என்பது நடக்காத காரியம் போலவே இருக்கும். காசு வேண்டுமானால் செய்து தானே ஆகவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: