Followers

Monday, November 6, 2017

சுக்கிரன்


ணக்கம்!
         சுக்கிரன் மட்டும் தான் சுகபோகவாழ்வை தரமுடியுமா மற்ற கிரகங்களால் கொடுக்கமுடியாத என்று ஒரு கேள்வி அனைவரின் மனதிலும் வரக்கூடிய ஒன்று தான். ஒவ்வொருவரும் அவர்களின் கர்மவினைப்படி மற்றும் இந்த பிறவியில் செய்யக்கூடிய பூஜை பலன்கள் படியும் அவர்களுக்கு சுகபோகவாழ்வு கிடைக்கும்.

சுகபோகம் என்றால் சுக்கிரன் மட்டும் தான் கொடுக்கும் என்பதை விட்டு விட்டு அவர்களின் ஜாதகத்தில் யார் கொடுப்பார்கள் என்பதை பார்த்து தெரிந்துக்கொள்ளவேண்டும். சுகபோகத்திற்க்கு காரகம் என்ற முறையில் சுக்கிரனை பார்ப்பார்கள்.

சுகபோகத்திற்க்கு உள்ள கிரகம் நல்ல பலனை கொடுத்தால் அது நன்றாக இருக்குமே என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சுகபோகத்திற்க்குரிய சுக்கிரன் நன்றாக இருக்கவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.

சுக்கிரன் பலனை கொடுப்பதற்க்கு அவர்களின் ஜாதகத்தில் தசாவும் ஒத்துழைக்க வேண்டும். தசா ஒத்துழைத்தால் மட்டுமே அவர்களுக்கு சுக்கிரன் முழுமையான பலனை கொடுக்கும். நடக்கும் தசாவுக்கும் சுக்கிரனுக்கும் ஒத்துழைக்கவில்லை என்றால் அந்த நேரத்தில் சுக்கிரனால் கொடுக்கமுடியாது.

தசாநாதன் வழிகொடுத்தால் சுக்கிரனால் நல்ல பலனை அவ்வப்பொழுது கொடுத்து கொண்டே இருக்கும். சம்பந்தப்பட்ட ஜாதகரும் பிரச்சினை இல்லாமல் வாழ்க்கை நடத்திக்கொண்டு இருப்பார்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: