Followers

Thursday, November 30, 2017

ஐந்தாவது வீட்டில் சுக்கிரன்


வணக்கம்!
          ஐந்தில் சுக்கிரன் நின்றால் என்ன பலன் என்பதை பார்க்கலாம். ஐந்தில் சுக்கிரன் நிற்பது நல்ல பலனை தரும் என்று பொதுவாக சொல்லலாம். பூர்வபுண்ணியத்தில் சுக்கிரன் இருப்பது அவர்களின் அறிவை நல்ல முறையில் வெளிப்படுத்தும்.

சுக்கிரன் ஐந்தில் நின்று இளம்வயதில் செவ்வாய் தசா நடந்தால் அவர்கள் விளையாட்டு துறையில் ஈடுபட்டு நிறைய பதக்கங்களை பெற வைக்கும். புதன் தசா நடந்தால் படிப்பில் வெற்றிப்பெற்று பதக்கங்களை பெறுவார்கள்.  ஐந்தில் நிற்க்கும் சுக்கிரன் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கி இருக்கும்.

ஐந்தில் சுக்கிரன் நின்றால் அவர்களுக்கு பெண் குழந்தைகள் தான் பிறக்கும் என்று சொல்லும் சோதிடர்கள் அதிகம் இருக்கின்றனர். அனுபவத்தில் சுக்கிரன் ஐந்தில் இருப்பவர்களுக்கு ஆண் குழந்தைகளும் பிறக்கின்றன. அந்தந்த நேரத்தில் நடைபெறும் தசாவும் அவர்களின் குலதெய்வமும் இதனை நிர்ணயம் செய்யும்.

பொதுவாக ஒரு தொழில் செய்வதற்க்கு சோதிடத்தில் பத்தாவது வீட்டு அதிபதியை பார்த்து அந்த கிரகம் எதனோடு தொடர்புக்கொள்கிறதோ அந்த தொழில்கள் எல்லாம் செய்யலாம் என்று சோதிடத்தில் சொல்லுவது உண்டு. பலருக்கு ஐந்தாவது வீடு தான் தொழில் நிர்ணயம் செய்யும்.

சுக்கிரன் ஐந்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டால் கண்ணை மூடிக்கொண்டு நாம் சுக்கிரனின் காரத்துவம் உடைய தொழில்களை பரிந்துரை செய்யலாம். சுக்கிரன் காரத்துவத்தில் உள்ள தொழில்கள் தான் அதிகபட்சம் அவர்களுக்கு அமையும். ஐந்தில் சுக்கிரன் நிற்பது நல்ல பலனை எதிர்ப்பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: