Followers

Wednesday, November 22, 2017

நவ அம்மன்(சண்டி) யாகம்


வணக்கம்!
          நவ அம்மன்(சண்டி) யாகம் இன்றோடு முடிவடைந்தது. மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அம்மனின் அருளால் இதனை நடத்த முடிந்தது. ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக இதனை செய்வதற்க்கு முதலில் எனக்கு நிறைய தயக்கம் இருந்தது.

பெரியளவில் பொருட்செலவில் செய்பவர்கள் கூட மூன்று நாட்களில் முடித்துவிடுவார்கள் நாம் எப்படி இதனை செய்வது என்று முதலில் தயக்கம் இருந்தது. அதோடு என்னுடைய மனநிலை மற்றும் உடல்நிலை சரியாக இயங்கவேண்டும் என்ற தயக்கம் இருந்தது. 

அம்மன் அருளால் நல்ல மனநிலை மற்றும் உடல்நிலையோடு இருந்து இதனை செய்து முடித்துவிட்டேன். நவ சண்டி யாகத்தை எனது வாட்ஸ்அப்பில் தொடர்புள்ளவர்களுக்கு தினமும் அனுப்பி வைத்தேன். 

ஒருவருக்கு மட்டும் தனியாக செய்தாலும் இது ஒரு நேர்மையான ஒரு யாகம் என்பதால் இதனை பார்த்து பயன்பெறவேண்டும் என்பதற்க்காக அனைவருக்கும் அனுப்பி வைத்தேன். பெரும்பாலும் சண்டி யாகம் நடைபெறுவது ஒரு சில எதிரி தொல்லைகளும் செய்வார்கள். எதிரி என்றாலும் அவர்கள் மனிதர்கள் தானே. நாம் அப்படி செய்யாமல் நூறு சதவீதம் நேர்மையான ஒரு யாகத்தை செய்கிறோம்.

உங்களிடம் சொல்லுவது எல்லாம் இதனை தனிநபர்களாக செய்துக்கொள்ளுங்கள். அனைவரும் வாழ்வில் ஒரு முறை நாம் செய்துக்கொள்ளவேண்டும் என்று நினையுங்கள் இறைவன் அருளால் அது உங்களுக்கு அமையும்.

விரைவில் கோயம்புத்தூர் வருகிறேன். சந்திக்க விரும்பும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: