Followers

Friday, November 3, 2017

குளியல்


வணக்கம்!
          ஜாதககதம்பத்தில் இருந்து வந்தவர்களில் பல பேர் ஒரு நேரம் மட்டும் குளிப்பவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் இரண்டு வேளையும் குளிக்க சொல்லிருந்தேன். இதனை கூடவா சொல்லவேண்டும் என்று கேட்கலாம். கண்டிப்பாக இதனை சொல்லி பல நண்பர்கள் பின்பற்றி வருகின்றனர்.

சுக்கிரனின் காரத்துவத்தில் தான் குளிப்பதும் வரும். சுத்தமாக குளிக்கவேண்டும் சுத்தமாக இருக்கவேண்டும் என்பது எல்லாம் சுக்கிரனின் காரத்துவத்தில் தான் வருகின்றது. உடலில் ஏற்படும் சூட்டை தடுப்பதற்க்கும் குளியல் தேவைப்படுகிறது.

சுக்கிரனின் காரத்துவத்தில் இது எல்லாம் வருகிறதா என்று கேட்கவேண்டாம். குளியல் என்பதை பல இடங்களில் ஆன்மீகம் அடிப்படையாக வைத்திருக்கின்றது. அதாவது கோவில் குளம் மற்றும் புனித நதியில் எல்லாம் நீராட சொல்லுகின்றது ஆன்மீகம்.

உங்களை நீராட வைக்கின்றது என்பது உடல் சுத்தம் மட்டும் இல்லை அது ஆன்ம சுத்தத்திற்க்கும் வழி வகுக்கிறது என்பதையும் ஆன்மீகம் வழி நடத்துகிறது. இதற்கு அடிப்படையில் சுக்கிரன் காரத்துவம் இருக்கின்றது.

இரண்டு நேரம் குளிக்கவேண்டும் கோவில் குளங்கள் மற்றும் புனித நதியில் நீராடிவிட்டு வருவதை உடனே செய்ய தொடங்குங்கள். இதுவும் சுக்கிரனின் பரிகாரமாக அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: