Followers

Monday, November 6, 2017

சக்தி


வணக்கம்!
         அம்மன் பூஜை மழை தூறல் இருப்பதால் தாமதம் ஆகின்றது. மழைவிட்டவுடன் உடனே பூஜை செய்துவிடலாம் என்று இருக்கிறேன்.

பல வருடங்களுக்கு முன்பு என்னை சந்தித்த நண்பர்கள் இருக்கின்றனர். அவர்கள் அந்த நேரத்தில் ஒரு வெற்றியை பெறவேண்டும் என்று கேட்டுள்ளனர். அவர்களின் வெற்றிக்கு இதனை எல்லாம் செய்யவேண்டும் என்று அந்த சமயத்தில் சொல்லிருந்தேன். 

என்ன நினைத்தார்கள் என்று தெரியவில்லை அதனை அவர்கள் செய்யவில்லை. அவர்கள் வாழ்வில் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டு வந்துவிட்டார்களா என்று தற்பொழுது பார்த்தால் அன்று இருந்த நிலையை விட தற்பொழுது கீழே சென்றுவிட்டனர். 

நம்மிடம் அதனை செய்யவில்லை என்பதற்க்காக அவர்கள் கீழே செல்லவில்லை. அவர்கள் தேடிக்கொண்டே இருந்த காரணத்தால் அவர்கள் முன்னேற்றம் காணவில்லை என்று தான் நினைக்கிறேன். பின்தங்கியே நிலையிலேயே இருந்துக்கொண்டு இருக்கின்றனர்.

அவர்களிடம் நான் கேட்ட தொகை அவர்களுக்கு அந்த நேரத்தில் மிக மிக குறைந்த விலை அதனை கொடுப்பதற்க்கு அவர்களுக்கு விருப்பம் இல்லை. தற்பொழுது வரை அவர்களின் போராட்டம் தாெடர்ந்துக்கொண்டு இருக்கின்றது.

ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு செல்வதற்க்கு கண்டிப்பாக சக்தி தேவை. அந்த சக்தியை ஒரு ஆன்மீகவாதியிடம் இருந்து நீங்கள் பெற்று தான் ஆகவேண்டும். அது எந்த ஆன்மீகவாதியகவும் இருக்கலாம் ஆனால் அதனை பெற்று விரைவில் முன்னேற்றப்பாதைக்கு செல்லுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: